Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
குளிர் காலத்துலயும் சருமம் பட்டு போல மாறனுமா? இந்த ஹெர்பல் க்ரீம் யூஸ் பன்ணுங்க
கருப்போ சிவப்போ சருமம் மெருகாக இருந்தால் மட்டுமே அழகு வெளிப்படும்.
சருமம் சிலருக்கு தொட்டால் கடினமாக இருக்கும். வறண்டு போய், சொரசொரப்புடன் இருந்தால் எப்படி பொலிவு வரும்.
அதனால்தான் சிலபேர் அழகாய் இருந்தாலும் அவர்களிடமிருக்கும் அழகு வெளிபடுவதில்லை.
குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் எல்லாருக்குமே வறண்டு போய் சுருக்கங்களுடன் இருக்கும்.
சருமத்தை மெருகேற்ற தகுந்த ஈரப்பதத்துடன் இருக்க போல்ட்ஸ்கை இங்கே பல அழகுக் குறிப்புகளை தருகிறது. உபயோகித்துப் பாருங்கள். பட்டு போல சருமம் கிடைக்கும்.

ஷியா பட்டர் :
விட்டமின் ஈ கேப்ஸ்யூலிலிருந்து எண்ணெயை எடுத்து அதில் ஷியா பட்டரை கலக்குங்கள். சரும க்ரீம் தயார்.
இதனை ஒரு காற்று பூகாத கண்டெயினரில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதனை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் பூசி 15 நிமிடம் கழித்து குளிக்கலாம்.

கோகோ பட்டர் :
கோகோ பட்டர் சாக்லெட் வாசனையில் இருக்கும். சருமத்திற்கு அருமையாக போஷாக்கை அளிப்பவை.
இந்த கோகோ பட்டரை வாங்கி அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேவைப்படும்போது உடலில் பூசி 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் :
சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் சில துளி லாவெண்ண்டர் வாசனை எண்ணெயை கலந்து கொள்ளுங்கள். இதனை உடல் முழுவதும் த்டவி குளித்தால் புத்துணர்வு கிடைக்கும். வியர்வை உண்டாகாது.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் :
உடலில் ஈரப்பதம் அதிக நேரம் நீடிக்கச் செய்யும். அதோடு இதன் நறுமணமும் மிதமாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் சில துளி ஆரஞ்சு வாசனை எண்ணெயை கலந்து இந்த க்ரீமை உடலில் பூசி குளித்துன் பாருங்கள். வாசனையுடன் வலம் வருவீர்கள்.

ஷியா பட்டர் மற்றும் தேயிலை மர எண்ணெய் :
சரும அலர்ஜி வியாதிகளுக்கும் சிறந்த மருந்தாக இந்த க்ரீம் இருக்கும். வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வை தரும்.
ஷியாபட்டரை எடுத்து அதில் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் சில துளி எலுமிச்சை வாசனை எண்ணெயை கலந்து கொள்ளுங்கள்.
இது எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு நல்லது. ஈரப்பதம் குளிர்காலந்த்தில் அதிக நேரம் நீட்டிக்கச் செய்யும்.



Click it and Unblock the Notifications











