Latest Updates
-
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்..
முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க சில டிப்ஸ்...
முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க எத்தனையோ க்ரீம்கள் கடைகளில் இருந்தாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பது போல் வராது.
சிலருக்கு முகம் மற்றும் சருமத்தின் சில இடங்களில் கருமையான படலம் போன்று இருக்கும். இந்த கருமை படலம் வெயிலில் அதிகம் சுற்றினால், சுற்றுச்சூழல் மாசுக்கள், வயது அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் ஏற்படும்.

இப்படி ஏற்படும் கருமையான படலத்தைப் போக்க பலரும் காஸ்மெட்டிக் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் காஸ்மெட்டிக் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இயற்கை வழிகள் சிறந்தது.
இங்கு முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பால்
பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தைத் துடைத்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமத்தில் இருக்கும் கருமையான படலம் நீங்கும்.

ஆரஞ்சு சாறு
2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தில் உள்ள கருமை அகலும்.

தயிர்
தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. இந்த தயிருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ, கருமை நீங்கி, சருமம் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தக்காளி சாறு
3 டீஸ்பூன் தக்காளி சாறுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்கலாம்.

தேன்
தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்கு படலங்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று மின்னும்.



Click it and Unblock the Notifications











