Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க சில டிப்ஸ்...
முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க எத்தனையோ க்ரீம்கள் கடைகளில் இருந்தாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பது போல் வராது.
சிலருக்கு முகம் மற்றும் சருமத்தின் சில இடங்களில் கருமையான படலம் போன்று இருக்கும். இந்த கருமை படலம் வெயிலில் அதிகம் சுற்றினால், சுற்றுச்சூழல் மாசுக்கள், வயது அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் ஏற்படும்.

இப்படி ஏற்படும் கருமையான படலத்தைப் போக்க பலரும் காஸ்மெட்டிக் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் காஸ்மெட்டிக் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இயற்கை வழிகள் சிறந்தது.
இங்கு முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பால்
பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தைத் துடைத்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமத்தில் இருக்கும் கருமையான படலம் நீங்கும்.

ஆரஞ்சு சாறு
2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தில் உள்ள கருமை அகலும்.

தயிர்
தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. இந்த தயிருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ, கருமை நீங்கி, சருமம் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தக்காளி சாறு
3 டீஸ்பூன் தக்காளி சாறுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்கலாம்.

தேன்
தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்கு படலங்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று மின்னும்.



Click it and Unblock the Notifications