Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
வேலைக்கு செல்லும் பெண்களா நீங்க? சருமத்தையும் கவனிங்க!!!

* சன் ஸ்கிரீன் லோசன் : வேலைக்கு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக வெயிலில் செல்ல வேண்டியிருக்கும். அப்போது சூரியக் கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுவதால், முகத்தில் கருமையான தோற்றம், சுருக்கம் போன்றவை ஏற்படும். ஆகவே அப்போது முகத்திற்கு தடவும் சன் ஸ்கிரீன் லோசனை, வெளியே செல்லும் 30 நிமிடத்திற்கு முன் முகத்திற்கு தடவ வேண்டும. இதனால் சருமத்தில் சூரியக்கதிர்கள் பட்டாலும் அதிகமான பாதிப்பு இருக்காது.
* ஈரப்பசையான சருமம் : வேலைக்கு செல்வதால், பெண்களால் அழகுக்காக அதிகமான நேரத்தை ஒதுக்க முடியாது. அதற்கு எளிமையான வழி, ஷவரிலோ அல்லது சாதாரணமாகவோ, குளித்தப் பின்னர் மாஸ்சுரைசர் கிரீமை சருமத்திற்கு தடவி சற்று நேரம் விட வேண்டும். பின் அதன் மேல், மேக் கப் செய்தால், ஈரப்பசையானது சருமத்தில் எப்போதும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சருமம் மென்மையாவதோடு, வறட்சியடையாமல், எளிதில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும்.
* கிளின்ஸர் : எங்கு வெளியே சென்று வந்தாலும், முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அப்போது பேஸ் வாஷ் கிரீமை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகக்குழிகளில் இருக்கும் அழுக்குகள் எளிதில் வந்துவிடும். அதற்காக பேஸ் வாஷ் கிரீமை பயன்படுத்தி தினமும் 4-5 முறை கழுவக் கூடாது. அவ்வாறு கழுவினால் முகத்தில் இருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிப்படையும். மேலும் இவற்றால் சிலசமயங்களில் முகத்தில் வெடிப்புகள், கோடுகள் போன்றவையும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே ஒரு நாளைக்கு 3 முறை கழுவினால் போதுமானது. அதற்கு மேல் கழுவ வேண்டும் என்றால், சுத்தமான நீரில் கழுவினால் போதுமானது.
* தண்ணீர் : உடலில் ஈரத்தன்மை அதிகம்க இருக்க தினமும் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலையும், கூந்தலையும் பாதுகாக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கைமுறையானது சற்று ஆரோக்கியமற்றதாக இருக்கும். ஆகவே உடலை நன்கு ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொள்ள, தண்ணீரை அதிகமாக குடித்தால், உடலில் இருக்கும் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறி, உடலும் நன்கு பிட்டாக இருக்கும்.
* வேலைக்கு செல்வதால், சரியாக சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் இருக்கும். ஆனால் நேரம் இல்லை என்பதற்காக சாப்பிடாமல் இருந்தால், உடலில் வேலை செய்வதற்கு தேவையான எனர்ஜி இல்லாமல் போகும். அதிலும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளான பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை உண்ணக் கூடாது. அப்போது பழங்கள், காய்கள் போன்றவற்றை வாங்கி வைத்து உண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்திற்கு தேவையான சத்துக்களும் கிடைத்து, அழகாக இருக்க முடியும். உயிர் வாழ்ந்தால் தானே வேலை செய்ய முடியும், ஆகவே ஆரோக்கியமான உணவுகளை உண்டு, அழகாக இருப்பதோடு, இனிமையான வாழ்க்கையையும் வாழுங்கள்.



Click it and Unblock the Notifications