Latest Updates
-
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம்
வேலைக்கு செல்லும் பெண்களா நீங்க? சருமத்தையும் கவனிங்க!!!

* சன் ஸ்கிரீன் லோசன் : வேலைக்கு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக வெயிலில் செல்ல வேண்டியிருக்கும். அப்போது சூரியக் கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுவதால், முகத்தில் கருமையான தோற்றம், சுருக்கம் போன்றவை ஏற்படும். ஆகவே அப்போது முகத்திற்கு தடவும் சன் ஸ்கிரீன் லோசனை, வெளியே செல்லும் 30 நிமிடத்திற்கு முன் முகத்திற்கு தடவ வேண்டும. இதனால் சருமத்தில் சூரியக்கதிர்கள் பட்டாலும் அதிகமான பாதிப்பு இருக்காது.
* ஈரப்பசையான சருமம் : வேலைக்கு செல்வதால், பெண்களால் அழகுக்காக அதிகமான நேரத்தை ஒதுக்க முடியாது. அதற்கு எளிமையான வழி, ஷவரிலோ அல்லது சாதாரணமாகவோ, குளித்தப் பின்னர் மாஸ்சுரைசர் கிரீமை சருமத்திற்கு தடவி சற்று நேரம் விட வேண்டும். பின் அதன் மேல், மேக் கப் செய்தால், ஈரப்பசையானது சருமத்தில் எப்போதும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சருமம் மென்மையாவதோடு, வறட்சியடையாமல், எளிதில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும்.
* கிளின்ஸர் : எங்கு வெளியே சென்று வந்தாலும், முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அப்போது பேஸ் வாஷ் கிரீமை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகக்குழிகளில் இருக்கும் அழுக்குகள் எளிதில் வந்துவிடும். அதற்காக பேஸ் வாஷ் கிரீமை பயன்படுத்தி தினமும் 4-5 முறை கழுவக் கூடாது. அவ்வாறு கழுவினால் முகத்தில் இருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிப்படையும். மேலும் இவற்றால் சிலசமயங்களில் முகத்தில் வெடிப்புகள், கோடுகள் போன்றவையும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே ஒரு நாளைக்கு 3 முறை கழுவினால் போதுமானது. அதற்கு மேல் கழுவ வேண்டும் என்றால், சுத்தமான நீரில் கழுவினால் போதுமானது.
* தண்ணீர் : உடலில் ஈரத்தன்மை அதிகம்க இருக்க தினமும் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலையும், கூந்தலையும் பாதுகாக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கைமுறையானது சற்று ஆரோக்கியமற்றதாக இருக்கும். ஆகவே உடலை நன்கு ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொள்ள, தண்ணீரை அதிகமாக குடித்தால், உடலில் இருக்கும் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறி, உடலும் நன்கு பிட்டாக இருக்கும்.
* வேலைக்கு செல்வதால், சரியாக சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் இருக்கும். ஆனால் நேரம் இல்லை என்பதற்காக சாப்பிடாமல் இருந்தால், உடலில் வேலை செய்வதற்கு தேவையான எனர்ஜி இல்லாமல் போகும். அதிலும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளான பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை உண்ணக் கூடாது. அப்போது பழங்கள், காய்கள் போன்றவற்றை வாங்கி வைத்து உண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்திற்கு தேவையான சத்துக்களும் கிடைத்து, அழகாக இருக்க முடியும். உயிர் வாழ்ந்தால் தானே வேலை செய்ய முடியும், ஆகவே ஆரோக்கியமான உணவுகளை உண்டு, அழகாக இருப்பதோடு, இனிமையான வாழ்க்கையையும் வாழுங்கள்.



Click it and Unblock the Notifications