Just In
- 20 min ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 2 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 4 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பண்டையகாலத்தில் யூஸ் பண்ண மாதிரி எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுனா... முடி நீளமா அடர்த்தியா வளருமாம்!
தலைமுடியில் நான்றாக மசாஜ் செய்வது, உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உண்மையில், 2016 ஆம் ஆண்டின் ஆய்வில், உச்சந்தலையில் மசாஜ் செய்வது அடர்த்தியான முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நம் தோற்றத்தில் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்போது, நாம் அழகாக தோற்றமளிப்போம். ஆனால், இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக தலைமுடி பிரச்சனை உள்ளது. இளம் வயதிலேயே முடி உதிர்தல், நரை முடி, வலுவிழந்த முடி மற்றும் பொடுகு தொல்லை என பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு பண்டையகால வழி உள்ளது. பதற்றம், கவலை மற்றும் சோர்வு உட்பட முடி மசாஜ் மூலம் சரிசெய்ய முடியாத எதுவும் இல்லை. இருப்பினும், இது முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் பிரபலமானது. எண்ணெயைக் கொண்டு முடி மசாஜ் செய்வது உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும்.
அதே வேளையில், நம் அம்மாக்கள் மற்றும் பாட்டிகள் முடி மசாஜ் செய்வதற்கு சூடான எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகளை நீண்ட காலமாக கூறிவருகிறார்கள். எனவே, சூடான எண்ணெய் சிகிச்சை என்றும் அழைக்கப்படும் சூடான எண்ணெய் முடி மசாஜ் எவ்வாறு முடி வளர்ச்சிக்கு உதவும் என்பதை இக்கட்டுரையில் அறிந்துகொள்வோம்.
சூடான எண்ணெய் சிகிச்சை
வாழ்க்கையில் நாம் அனைவரும் தலைமுடி பிரச்சனைகளை அனுபவித்திருக்கிறோம். முடி உதிர்தல் மற்றும் சேதமடைந்த முடி, இந்த பிரச்சினைகளை தீர்க்க நாம் தொடர்ந்து பல முயற்சிகளை செய்திருப்போம். வலுவான, அடர்த்தியான கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் வெதுவெதுப்பான எண்ணெய்களைக் கொண்டு தங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் பழங்கால தந்திரத்தை இந்திய பெண்கள் சமீபகாலமாக மறந்துள்ளனர். ஆதலால், உங்கள் தலைமுடிக்கு வெதுவெதுப்பான எண்ணெயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொண்டு, இங்கே கொடுக்கப்பட்டுள்ளதை முயற்சி செய்யுங்கள்.
ஏன் சூடான எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்?
தலைமுடியில் நான்றாக மசாஜ் செய்வது, உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உண்மையில், 2016 ஆம் ஆண்டின் ஆய்வில், உச்சந்தலையில் மசாஜ் செய்வது அடர்த்தியான முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில், வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடியின் மேற்புறத்தை அடைப்பதன் மூலம் செயல்படுகிறது. இது உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது.
எவ்வாறு செய்வது?
சூடான எண்ணெய் சிகிச்சையில், எண்ணெயை முதலில் சூடாக்க வேண்டும். எண்ணெயின் வெப்பநிலை அதிகமாக இருந்தால், உச்சந்தலையில் எரிக்கப்படலாம். உங்கள் முடி எண்ணெயின் வெப்பநிலை பொருத்தமாக இருக்க, சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான எண்ணெயை உச்சந்தலையில் தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விட்டு, கழுவ வேண்டும். இந்த செயல்முறை மயிர்க்கால்களை வலுப்படுத்தும். உண்மையில், இது உங்கள் பொடுகு பிரச்சனையை சமாளிக்க உதவும்.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
உங்கள் உச்சந்தலையில் சூடான எண்ணெயைப் பயன்படுத்தும்போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த இரத்த வழங்கல் புதிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுவருகிறது மற்றும் இந்த புதிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் முடியின் புதிய வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. எனவே, சூடான எண்ணெய் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இவை தோல் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சூடான எண்ணெய் சிகிச்சை உங்களுக்கு சரியானதா?
சாதாரண முடி முதல் வறண்ட, உடையக்கூடிய அல்லது உதிர்ந்த முடி உள்ள எவரும் ஒரு சூடான எண்ணெய் முடி மசாஜ் மூலம் பயனடையலாம். ஏனெனில் இது முடியில் ஈரப்பதத்தை நிரப்ப உதவுகிறது. இருப்பினும், உங்கள் முடி அல்லது உச்சந்தலையில் க்ரீஸ் இருந்தால், குறைந்த கொழுப்புள்ள எண்ணெயைப் பயன்படுத்த விரும்பலாம். ஜோஜோபா மற்றும் பாதாம் எண்ணெய்கள் பொருத்தமான விருப்பங்கள். ஏனெனில் அவை எளிதில் உறிஞ்சப்படும் தன்மையைக் கொண்டுள்ளன.
முடி மசாஜ் எவ்வாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது?
உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்கள் தலைமுடியை தீவிரமாக மசாஜ் செய்தால் அதிக முடி உதிர்தல் ஏற்படலாம். உங்கள் தலைமுடியை மசாஜ் செய்யும் போது, உங்கள் முடி செல்கள் வலுவடைந்து, உங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை எடுத்துச் சென்று, வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியான முடியை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் மற்றும் க்ரீஸ் இருந்தால், அதிக மசாஜ் மற்றும் சூடான எண்ணெய் சிகிச்சையை தவிர்க்கவும் அல்லது சரியான எண்ணெயைப் பயன்படுத்தவும். எண்ணெய் நிறைந்த உச்சந்தலையில் எண்ணெயைப் பயன்படுத்துவது துளைகளை அடைத்து தொற்றுக்கு வழிவகுக்கும்.