Latest Updates
-
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...!
பொடுகு தொல்லை இல்லாம உங்க முடி அடர்த்தியாவும் பளபளனு இருக்க நீங்க இத செஞ்சா போதுமாம்...!
மழை மற்றும் அழுக்கு உங்கள் முடியில் பயன்படுத்தப்பட்ட நிறத்தை மாற்றுகிறது மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. முடியின் நிறத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்தவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை தலைமுடி பிரச்சனை. நாம் உடல் ஆரோக்கியத்தில் கவண் செலுத்துவதைபோல தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. வளர்ந்து வரும் நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவுகள் காரணமாக தலைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. பருவ காலங்களும் நமக்கு சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனையை ஏற்படுத்துவது வழக்கம். மழை மற்றும் மாசுபாட்டால் தோல் மட்டுமல்ல, முடி மற்றும் உச்சந்தலையும் கூட பாதிக்கப்படுகின்றன. வியர்வையால் நிலைமை மோசமடைகிறது.

இது தூசி துகள்கள் மற்றும் பிற மாசுபடுத்தப்பட்ட கூறுகளை மேலும் ஈர்க்கிறது. முடி மற்றும் உச்சந்தலையில் பொதுவாகக் காணப்படும் சில பிரச்சனைகள் மற்றும் இந்த மழைக்காலத்தில் அழகான தலைமுடியை பராமரிப்பதற்கான சில வழிகாட்டுதல்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

முடி உதிர்தல்
இந்த மழைக்காலத்தில் முடி ஈரமாகி விடுவதால், முடி உதிர்வதுடன், அழுக்காகவும் காணப்படும். பெரும்பாலான மக்கள் பொதுவாக உச்சந்தலையில் எண்ணெயை மசாஜ் செய்வதைத் தேர்வு செய்கிறார்கள். ஆய்வின்படி மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் எண்ணெய் முடியின் தண்டுக்குள் செல்லாது. ஆனால் எண்ணெய் பூசுவது வெளிப்புற அடுக்குக்கு நல்லது. மேலும், உங்கள் தலைமுடியை அலசி துடைத்து உலர்த்திய பிறகு ஆன்டி-ஃபிரிஸ் சீரம் பயன்படுத்தவும்.

முடியின் நிறத்தில் மாற்றம்
முடியின் தண்டு சேதமடைவதைத் தவிர, இது முடியின் இயற்கையான நிறத்தையும் அமைப்பையும் மாற்றுகிறது. தலைமுடிக்கு வண்ணம் பூசுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மழை மற்றும் அழுக்கு உங்கள் முடியில் பயன்படுத்தப்பட்ட நிறத்தை மாற்றுகிறது மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. முடியின் நிறத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்தவும். பயணத்தின் போது உங்கள் தலைமுடியை நல்ல துணியால் மூடி வைக்கவும்.

அதிகப்படியான பொடுகு
அநேகமாக ஒருவர் சந்திக்கும் மிகவும் பொதுவான முடிப் பிரச்சனை பொடுகு. பொடுகு செதில்களை விரைவாக அகற்றுவதற்கு அடிக்கடி ஷாம்பு போட்டு முடியை அலசுவது ஒரு சிறந்த வழியாகும். கீட்டோகோனசோல், செலினியம் சல்பைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் அடங்கிய மருந்து ஷாம்பூவை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது செதில்களை அகற்றுவதோடு, செதில்களின் உற்பத்தியையும் குறைக்க உதவுகிறது.

எண்ணெய் முடி
இயற்கையான ஸ்கால்ப் ஆயில் உற்பத்தியாகி மழைநீருடன் கலப்பதே இதற்குக் காரணம். தினசரி பயன்பாட்டிற்கு போதுமான மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்தவும். ஆனால் உங்கள் உச்சந்தலையைச் சுத்தப்படுத்தும் அளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டும். முடியின் நுனியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இறுதியாக, முடியை ஷாம்பு செய்து, கண்டிஷனிங் செய்யும் போது, கண்டிஷனரை பயன்படுத்திய பிறகு வெதுவெதுப்பான நீரில் இருந்து குளிர்ந்த நீரில் முடியை அலசவும். குளிர்ந்த நீர் முடியின் திறப்பை சுருக்கி, எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்.

உச்சந்தலையில் பூஞ்சை தொற்று
முடி மற்றும் உச்சந்தலையில் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது உச்சந்தலையில் பூஞ்சை தொற்று ஏற்படாமல் இருக்க சிறந்த வழி. இது மழைக்காலத்திலும் அடிக்கடி காணப்படுகிறது. ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் உச்சந்தலையை சுத்தப்படுத்த பூஞ்சை காளான் லோஷனைப் பயன்படுத்துவது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

முடி பொலிவை இழந்தது
முடி வறண்டு, உதிர்வதால், அதன் பொலிவையும் அழகையும் இழக்கிறது. அரை கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து ஒரு கப் தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்யவும். ஷாம்பு போட்டு அலசிய பிறகு இதை உங்கள் தலைமுடியில் ஊற்றவும். இது சூரியனால் சேதமடைந்த உலர்ந்த மற்றும் உடையக்கூடிய முடிக்கு பிரகாசத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

உடையக்கூடிய முடி
நீண்ட நேரம் சூரியக் கதிர்களுக்கு வெளிப்படும் போது முடி உடையக்கூடியதாக மாறும். புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும் மற்றும் பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளவும். முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை பயோட்டின் வைட்டமின் அதிக மதிப்புடையது மற்றும் முடி உதிர்தல் அல்லது உடையக்கூடிய மற்றும் பலவீனமான முடி பிரச்சனையை சந்திக்கும் எவரும் தங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் பயோட்டின் சப்ளிமெண்ட்ஸை முயற்சிக்கலாம்.



Click it and Unblock the Notifications











