Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? உங்களுக்கு உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!!
நீளமான கூந்தல் பெற இங்கே ஆயுர்வேத குறிப்புகள் கொடுக்கப்படுள்ளன. இவை கூந்தல் வளர்ச்சியை தூண்டி, ஆரோக்கியமான கூந்தல் பெற உதவுகின்றன்.
சிலருக்கு கூந்தல் கட் செய்தாலும் வேகமாக வளரும். ஆனால் குறிப்பிட அளவு வந்த பிறகு நின்று விடும். அரை அடிக்கு மேல் தாண்டாது. நீண்ட முடி இல்லையென்று வருத்தம் இருந்திருக்கிற்தா?

இந்த பாட்டி வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். அனேகம் பேர் இதனை முயற்சித்திருக்க மாட்டீர்கள். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கசகசா, அதிமதுரம் :
கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் நரை முடி மறையும். கூந்தலும் வளரும்.

சீகைக்காய் மற்றும் மோர் :
தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

வடித்த கஞ்சி :
சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம். இதனால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.

மருதாணி, தேங்காய்பால் :
ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறட்சி, கரடு முரடான தன்மை ஆகியவை மறைந்து மிருதுவாகும்.

காய்கறி வைத்தியம் :
வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப் அளவு) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். மறு நாள் அவற்றை பிழிந்து கிடைக்கும் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இப்படி செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications