Latest Updates
-
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்..
விநாயகரின் தோற்றம் குறித்த கதைகள்!!!
இந்து புராணங்கள் பெரும்பாலும் வாய்வழிக் கதைகளே. பல ஆண்டுகளாக வழிவழியாகச் சொல்லப்படுவதனால், ஒவ்வொரு கதைக்கும் பல கிளைக்கதைகளும், பல பதிப்புகளும் உள்ளன. விநாயகரின் தோற்றம் குறித்த கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
மூலக்கதை ஒன்றாக இருந்தாலும் பலரால் பலமுறை திருப்பிச் சொல்லப்பட்டிருப்பதால் விநாயகரின் தோற்றம் குறித்து மூன்று கதைகள் சொல்லப்படுகின்றன.

கதை: 1
கைலாச மலையில் பார்வதி தனிமையாக உணர்ந்த போது, அவர் உடலில் இருந்த அழுக்கையெல்லாம் திரட்டி ஒரு சிறுவனின் சிலையை செய்தாராம். பிறகு அதை உயிர்ப்பித்து கணேசர் என்ற பெயரும் சூட்டினார். பின் தான் குளிக்கச் செல்லும் போது, வாயிலைக் காக்க கணேசரை பணித்துவிட்டு குளிக்கச் சென்றாராம்.
அப்போது அங்கே வந்த சிவனை கணபதி தடுக்க, கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை சீவிவிட்டாராம். கணபதியின் அலறலைக் கேட்ட பார்வதி ஓடிவந்து, அவரின் நிலையை கண்டு கோபம் கொண்டாராம். அதுமட்டுமல்லாது அவரது மகன் கணபதி மீண்டும் உயிர்பெறவில்லையென்றால் உலகத்தையே அழிக்கப்போவதாக சூளுரைத்தாராம். அங்கு நடந்த குழப்பத்தில் கணபதியின் தலையைக் காணவில்லை.
பிறகு கிங்கரர்களை அழைத்த சிவன், காட்டிற்கு சென்று முதன்முதலில் தென்படும் மிருகத்தின் தலையை எடுத்து வாருங்கள் எனப் பணிக்கவே, அவர்களும் அவ்வாறே ஒரு யானையின் தலையை எடுத்து வந்தார்கள். பிறகு கணபதியின் தலை இருந்த இடத்தில் ஒரு வெள்ளை யானையின் தலையை மாட்டி, அவரை உயிர்ப்பித்தாராம் சிவன்.
கதை: 2
இரண்டாவது கதை ஏறத்தாழ ஒரேமாதிரியாக இருந்தாலும், இதில் அழுக்கிற்கு பதில் விநாயகரை சந்தனத்தைக் கொண்டு பார்வதி உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் பார்வதியின் முழு அருளையும் பெற்ற கணபதியை அழிக்க வேண்டுமானால், ஒரு முழு ராணுவமே தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
கதை: 3
இம்மார்டஸ் ஆஃப் மெலுஹுவா என்ற புதிய நாவலில் இந்த மூன்றாவது கதை வருகிறது. எழுத்தாளர் அம்ரிஷ் புதிய திருப்பத்துடன் கூடிய கதையை சொல்லியிருக்கிறார். சதியின் முதல் கணவருக்குப் பிறந்த கணேசர் சில குறைபாடுகளுடன் பிறந்ததால், சதியின் தந்தை கணேசரை நாகர்களின் இடத்திற்கு விரட்டிவிட்டாராம். கணேசர் சிவனின் குழந்தை அல்ல என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக இந்த கோணம் பதிவு செய்கிறது.
இவை மூன்றும் கணேசரின் பிறப்பு பற்றிய பதிப்புகளாகும், உங்களுக்கு வேறு கதைகள் தெரிந்தால் தயவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











