Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா? பிரச்சனை வராம தப்பிச்சிக்கலாம்...!
நீங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி உங்கள் கூட்டாளரிடம் பொய் சொன்னீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் துணை உங்களை அழைத்து அதைப்பற்றி பேசும் வரை காத்திருக்க வேண்டாம்.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தணும் என்று கூறுவது வழக்கம். ஆனால், அந்த கல்யாண வாழ்க்கையிலும் ஆயிரம் பொய்கள் நிறைந்திருந்தால், அந்த உறவு எப்படி இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறிதான். இதை நீங்கள் சிந்திக்க முயற்சிக்கும் முன், வல்லுநர்கள் கூறுகிறார்கள், உறவுகளில் பொய் சொல்வது மிகவும் பொதுவானது என்று. இருப்பினும், உங்கள் உறவுக்கு தீங்கு விளைவிக்கும் பொய்கள் உள்ளன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

இது உண்மையில் பொய்யைப் பொறுத்தது, ஏன் அதை முதலில் சொல்கிறீர்கள். உறவுகளில் பொய் சொல்வது பொதுவானது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். ஒரு தம்பதியினரிடையே இருவரும் அடிக்கடி பொய்கள் கூறிக்கொள்கிறார்கள். பொய்களில் பெரிய பொய், சிறிய பொய் என வகைப்படுத்தப்படுகிறது ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் கூட்டாளரிடம் அவர்கள் பொய் சொல்லியிருக்க வேண்டிய சூழ்நிலையை அனுபவிக்கிறார்கள். இதை நினைத்து நீங்கள் வருத்தம் கொண்டிருப்பீர்கள். உங்கள் கூட்டாளியிடம் உங்கள் பொய்யை எப்படி, எப்போது ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்களே ஒப்புக்கொள்ளுங்கள்
நீங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி உங்கள் கூட்டாளரிடம் பொய் சொன்னீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் துணை உங்களை அழைத்து அதைப்பற்றி பேசும் வரை காத்திருக்க வேண்டாம். நீங்களே உங்கள் துணையிடம் சரியான சூழ்நிலையை பார்த்து அந்த பொய்யை ஏற்றுக்கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் ஏன் முதலில் பொய்யைச் சொன்னீர்கள் என்பதைப் பற்றி அவருடன் மனம் விட்டு பேசுங்கள். அதில் உண்மையும், நியாயமும் இருந்தால் கண்டிப்பாக உங்கள் துணை அதை ஏற்றுக்கொள்வார்.

"நான்" உடன் தொடங்கவும்
நீங்கள் எப்போதும் உங்கள் வாக்கியங்களை "நான்" மற்றும் வேறு வார்த்தை மூலம் தொடங்குவதை உறுதிசெய்ய வேண்டும். "நான் உங்களுடன் நேர்மையாக இருக்கவில்லை" அல்லது "நான் இதைச் செய்ததற்கு வருந்துகிறேன்" போன்ற ஒன்று. இதில் உங்கள் கூட்டாளரைக் குற்றம் சாட்டுவது மற்றும் உங்கள் பங்குதாரர் ஏதேனும் தவறு செய்ததைப் போல உங்கள் பொய்யைப் பார்ப்பது பற்றி யோசிக்காதீர்கள். அதனால்தான் நீங்கள் பொய் சொல்லத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று உங்கள் துணை எடுத்துக்கொள்வார். இது உங்கள் கூட்டாளரை வெறுமனே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும் இது உங்கள் பொய்யை இரட்டிப்பாக்கும்.

உங்கள் உறவை பாதிக்கும்
உங்கள் கூட்டாளரிடமிருந்து ஒரு விஷயத்தைப் பற்றி பொய் சொல்வதன் மூலம் நீங்கள் ஒரு ரகசியத்தை உங்களுக்குள் வைத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, நீங்கள் சொன்ன பொய்யை அவர்கள் கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் பொய்யில் அதிக உள்ளடக்கத்தைச் சேர்க்க வேண்டாம். அதை ஏற்று அவர்களுக்கு பதிலாக உண்மையை சொல்லுங்கள். உங்கள் கூட்டாளியின் நம்பிக்கையை பணயம் வைக்க வேண்டாம். ஏனெனில் இது நீண்ட காலத்திற்கு உங்கள் உறவை பாதிக்கும்.

அதைச் சரியாகச் செய்ய முயற்சிக்கவும்
உங்கள் கூட்டாளியிடம் உங்கள் பொய்யை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் எப்படி உணர்ந்தார்கள், விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை எப்படி, ஏன் இழந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் கூட்டாளருடன் பேசுவது அவசியம். அந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை நீங்கள் உருவாக்க வேண்டும்.

பொறுமையாய் இருங்கள்
நீங்கள் ஒரு பொய்யை சொல்லி மாட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் அதைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை உங்கள் துணையுடன் பேச வேண்டியிருக்கும். உங்களுடைய ஒரு பொய் உங்கள் கூட்டாளியின் மனதில் செய்திருக்கும் சேதம் பற்றி உங்களுக்குத் தெரியாது. எனவே, ஒவ்வொரு முறையும் அவர்கள் அதைக் கொண்டு வந்து பொறுமையாக இருங்கள். அந்த உரையாடலை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் நடத்துங்கள். இது உங்கள் துணையிடம் பொய்யைக் கூறியதற்கு நீங்கள் உண்மையிலேயே வருந்துகிறீர்கள் என்பதைக் காண்பிக்கும்.

இறுதி குறிப்பு
பொதுவாக ஆண், பெண் உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்திருக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வது உறவில் மிக அவசியம். அந்த புரிதல்கள் இல்லாதபோது, பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு உறவில் ஆணோ, பெண்ணோ பொய் கூறுகிறார்கள் என்றால், ஒன்று அந்த உறவில் நம்பிக்கை தன்மை குறைவாக இருக்கும் அல்லது தன் துணையின் மனதை காயப்படுத்த வேண்டாம் என்று நினைப்பதினால் இருக்கலாம். ஆனால், நீங்கள் சொல்லும் அந்த பொய் உங்கள் உறவில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது.



Click it and Unblock the Notifications