Just In
- 5 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 7 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 8 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உங்க திருமண வாழ்க்கை வேற லெவலில் மகிழ்ச்சியாய் இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
உங்கள் கூட்டாளரை மாற்றச் சொல்வது ஒரு உறவில் ஒருவர் செய்யக்கூடிய மோசமான விஷயங்களில் ஒன்றாகும். ஆம், நீங்கள் விரும்பும் ஒரு நபரை அபப்டியே ஏற்றுக்கொள்வதே உறவின் அன்பின் சிறப்பு.
ஒரு ஆணும் பெண்ணும் திருமண உறவில் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மிகவும் சவாலானது. ஏனெனில், இங்கு ஆண், பெண் உறவில் பல சிக்கல்கள் நிறைந்திருக்கிறது. ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகள் வேறுமாதிரியாக இருக்கலாம். அதை ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்ற ஒன்று இருக்கும். திருமணமான பிறகு அது அதிகரிக்கும். ஒரு நல்ல இன்பமான கனவு வாழ்க்கை அமைய ஒவ்வொருவரும் தங்களது துணையிடம் இருந்து எதிர்பார்ப்பது புரிதலும், இணக்கமும் தான். இது கணவன் மனைவி இருவரிடம் இருந்து வர வேண்டும். ஏனென்றால் திருமணம் உறவில் கணவன் மனைவி என இருவரது பங்களிப்பும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த கணவன் மனைவி உறவில் ஒரு சில விஷயங்களை பற்றி பேசுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மற்ற உறவுகளிடம் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் கணவன் மனைவிகள் அதை பற்றி பகிர்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ரகசியம் தேவையில்லை. ஆனால் புரிந்துகொள்ளுதல், கவனிப்பு, அன்பு மற்றும் நம்பிக்கை போன்ற சில எளிய விதிகள் இரண்டு நபர்களை ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் வைத்திருக்கின்றன. மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உதவும் சில விதிகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
எதிர்மாறாக இருப்பது
இரண்டு முழுமையான நபர்களாக இருப்பது என்பது ஒரு திருமணத்தில் பலவிதமான கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது. தம்பதியர் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களை மதித்து மரியாதை செய்யும் வரை அது நிச்சயமாக உறவை பாதிக்காது. ஏனெனில், கருத்து சுதந்திரம் தம்பதிகளுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒருவரின் கருத்தை மற்றொருவர் மதிக்க வேண்டும். இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று.
ஒருவருக்கொருவர் மாறவில்லை
உங்கள் கூட்டாளரை மாற்றச் சொல்வது ஒரு உறவில் ஒருவர் செய்யக்கூடிய மோசமான விஷயங்களில் ஒன்றாகும். ஆம், நீங்கள் விரும்பும் ஒரு நபரை அபப்டியே ஏற்றுக்கொள்வதே உறவின் அன்பின் சிறப்பு. அதுவே உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி பாதைக்கு இட்டுச்செல்லும். ஏனெனில், திருமணம் எப்போதும் ஒரே விருப்பு மற்றும் கருத்துக்களைக் கொண்ட இரண்டு நபர்களைக் கொண்டதாக இருக்காது. ஒருவருக்கொருவர் கருத்துக்களுக்கு பெரும் வேறுபாடுகளும் எதிர்ப்புகளும் இருக்கும். ஆனால் ஒருவருக்கொருவர் பதிப்புகளை மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் வழி இருக்கிறது.
சமரசங்களைத் தவிர்ப்பது
சமரசங்கள் ஒவ்வொரு திருமணத்தின் ஒரு பகுதியாகும் என்று ஒவ்வொரு ஜோடியும் கேள்விப்பட்டிருக்க வேண்டும். உறவில் சமரசம் செய்வது முக்கிய அங்கமாக கூறுவார்கள். ஆனால், இரண்டு நபர்கள் சமரசங்களை நம்பாமல் ஒருவருக்கொருவர் நேசிப்பதில் உறுதியாக இருக்கும்போது, அந்த திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். அதனால், இரண்டு நபர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை பொருட்படுத்தாமல் ஒருவரை ஒருவர் முழுமையாக நேசிப்பதாக உறுதிமொழி எடுக்கலாம்.
தவறுகளை ஏற்றுக்கொள்வது
தவறுகளை ஏற்றுக்கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் திருமணங்களில் மிகப்பெரிய முரண்பாடுகள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, யாரும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் ஈகோவை கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள். ஆனால் தம்பதியர்கள் இந்த அகங்காரத்திற்கு இடமில்லாத வகையில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடிந்தால், இந்த பொன்னான விதி அவர்களுக்கு பொன்னான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை ஏற்படுத்தி தரும்.
ஒன்றாக நேரம் செலவிடுங்கள்
திருமண உறவில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவது மிக நல்ல விஷயம் அவசியமான ஒன்று. ஆனால், எப்போதும் உங்களடைய துணை உங்களுடனே தான் இருக்க வேண்டும் என்பது சரியல்ல. உங்கள் துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்ய அவரை அனுமதியுங்கள். அவர் தனது நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்றால், செல்லட்டும் செல்லட்டும் தடுக்க வேண்டாம். அப்போது தான் அவர் தன்னுடைய ஆசை மற்றும் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்று உங்களுடன் சந்தோஷமாக இருப்பார்.
நிதி பிரச்சனைகள்
கணவன் மனைவி உறவில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது பொருளாதாரம் தான். எனவே திருமணத்திற்கு முன்னரே ஒருவருக்கொருவர் தங்களது நிதி நிலையை பற்றி தெளிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னால் இதை தான் செய்ய முடியும். இது எல்லாம் என் தகுதிக்கு அப்பாற்பட்டவை என்பது போன்ற விஷயங்களை இருவரும் கலந்து பேசி தெரிந்துகொள்ள வேண்டும். இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வதே கணவன் மனைவி உறவிற்கு சிறந்த அடையாளமாகும்.
கடந்த கால வாழ்க்கை
உங்களது கடந்த கால வாழ்க்கையை பற்றி உங்களுடைய மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றால், உங்களது மனைவி அதனை புரிந்து கொள்பவர். நீங்கள் அவரிடம் கண்டிப்பாக உண்மையை மறைக்க கூடாது. ஏனெனில், எதிர்காலத்தில் அவருக்கு அந்த பிரச்சனையை பற்றி தெரிய வந்தால், அது நிச்சயமாக உங்கள் உறவில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம்
ஒரு திருமணத்தில் இரண்டு பேர் ஒன்றாக பிணைக்கப்பட்டால் என்ன செய்வது? அவர்களால் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க முடியாதா? நிச்சயமாக, ஒரு ஜோடி திருமணத்திற்கு ஏற்ப தங்கள் முழு வாழ்க்கையையும் ஆளுமையையும் வேறுபடுத்தக்கூடாது. இந்த புனிதமான பிணைப்பு அவர்களின் அன்பின் நீட்சி மட்டுமே. இரண்டு நபர்களும் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழ்க்கையை வாழலாம். தங்கள் சொந்த நலன்களைப் பின்பற்றலாம் மற்றும் தங்கள் கூட்டாளியின் ஆதரவுடன் தங்கள் சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்.