Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 6 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தைய பெத்துக்கிட்டா இப்டித்தான்! My Story #193
அவளுக்கு திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்து விட்டிருந்தது, அதன் பிறகு அந்த காதலர்களின் வாழ்க்கையும், அந்த குழந்தையின் வாழ்க்கையும் எப்படியிருந்தது என்பதைச் சொல்லும் கதை.
அவனை முதன் முதலாக பன்னிரெண்டாம் வகுப்பில் தான் பார்த்தேன், ஒன்பதாம் வகுப்போடு அட்மிஷன் முடிந்தது, மேற்கொண்டு எந்த வகுப்புகளுக்கும் எங்கள் பள்ளியில் அட்மிஷன் கொடுக்கமாட்டார்கள், கேட்டால் ரிசல்ட் பாதிக்கும் என்று சாக்கு சொல்வார்கள். பன்ன்னிரெண்டாம் வகுப்பிற்காக அடிமாடுகளாக எங்களை ஒன்பதாம் வகுப்பிலிருந்தே தயார்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது பின்னர் தான் புரிந்தது.
இந்த சூழ்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பின் போது, அதுவும் வகுப்புகள் எல்லாம் ஆரம்பித்து சரியாக ஒரு மாதம் கழித்து அவன் வந்து சேர்ந்தான். ஏற்கனவே பதினோராம் வகுப்பு பாதியிலிருந்தே பன்னிரெண்டாம் வகுப்பு எடுக்க ஆரம்பித்திருந்தாலும் அதிகாரப்பூர்வமாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கான வகுப்பறையில் உட்கார்ந்து ஒரு மாதம் ஆகியிருக்கும் சூழ்நிலையில் தான் வந்து சேர்ந்தான்.
எங்கள் வகுப்பறையில் இருந்த எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், யாராக இருக்கும் எப்படி பன்னிரெண்டாம் வகுப்பில் சேர இவனுக்கு அனுமதி கொடுத்தார்கள். என்ன காரணத்தால் பள்ளி மாற்றியிருப்பான், படிப்பில் படுகெட்டிக்காரனாக இருந்தால் ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து விலக அனுமதித்திருக்கமாட்டார்கள். சற்றே சுமாராகத்தான் படிப்பான் என்றால் இங்கே அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள். அன்றைக்கு வகுப்பில் எல்லாரும் அவனைப் பற்றி தான் பேச்சு.