Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இல்லறத்திற்கு வேட்டு வைக்கும் அந்த நான்கு விஷயங்கள்!!!
சண்டை, சச்சரவுகள் இல்லாத தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இல்லறத்தில் ஈடுபடுகிறார்கள் என்று நீங்கள் எண்ணினால், அந்த எண்ணத்தை உடனே உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடுங்கள். சண்டை, சச்சரவு இல்லாத உறவும், உப்பு, காரம் இல்லாத உணவும் ருசிக்காது. ஆனால், இங்கு இதன் அளவு தான் ருசியை தீர்மானிக்கிறது.
அளவுக்கு அதிகமாக உப்பும், காரமும் இருந்தால் சாப்பிட முடியாது. அளவுக்கு அதிகமாக சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் இருந்தால் ஒன்றாக வாழ முடியாது. ஓர் உறவில் விரிசல் ஏற்பட சில காரணங்கள் தான் இருக்கிறது. முக்கியமான ஒன்று புரிதல் மற்றும் மதிப்பளித்தல். உங்கள் குணாதிசயமாக நீங்கள் கருதும் செயல்பாடுகள் உறவை அழிக்கும் கருவியாக கூட மாறலாம்.
எனவே, இல்லற உறவிற்கு பாதகமாக அமையும் அந்த நான்கு விஷயங்கள் பற்றி முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்....

விமர்சனம்
குழந்தைகளுக்கே அவர்கள் செய்யும் செயல்கள் குறித்து விமர்சனம் செய்வது, ஒப்பிடுவது பிடிக்காது. இதே நீங்கள் உங்கள் துணையை, அவர் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் குற்றம் குறை கூறுவது, விமர்சனம் செய்துக் கொண்டே இருப்பது நிச்சயம் ஒருநாள் உறவில் பெரும் விரிசல் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

பாதுகாப்புத்தன்மை
திருமணத்திற்கு முன்பு தந்தை, திருமணத்திற்கு பிறகு கணவன். இந்த இருவர்களை தான் தனது முழுமையான பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் என ஓர் பெண் கருதுகிறாள். எனவே, இந்த பாதுகாப்பை சுவரை நீங்கள் பலப்படுத்த வேண்டுமே தவிர, தவிடுபொடியாக்கிவிடக் கூடாது.

மழுப்பும் பதில்கள்
கணவன், மனைவி மத்தியிலான உரையாடலின் போது மழுப்பும் பதில்கள் வருவது, சந்தேகத் தன்மை அதிகரிக்க கருவியாகிவிடுகிறது. எனவே, பொய் கூறினாலும் கூட தைரியமாக பதட்டமின்றி கூறுங்கள். பிறகு அந்த தவறை, பொய் கூறியதை அவர்கள் கண்டறியும் முன்னரே கூறிவிடுங்கள். இல்லையேல் கண்டிப்பாக பூக் கம்பமாக இருப்பவர்கள், பூகம்பமாக வெடிக்கக் கூடும்.

அலட்சியம்
உங்கள் துணை உங்களிடம் கூறும் விஷயங்கள், உங்களுடன் கலந்தாய்வு செய்யும் விஷயங்கள் போன்றவற்றை மிக அலட்சியமாக எடுத்துக் கொள்வது மிகவம் தவறு. இது நீங்கள் அவரை உதாசினம் படுத்துவது போல ஆகிவிடும். எனவே, எந்த விஷயமாக இருப்பினும் காதுக் கொடுத்து கேட்டு பதில் அளியுங்கள்.

உடலுறவு
உடலுறவில் ஈடுபடுவது இயற்கை. ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் கொஞ்சி கொஞ்சி பேசுவது, மற்ற நேரங்களில் கொஞ்சமாக பேசுவது. நீங்கள் அவரை அதற்காக மட்டும் பயன்படுத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை உண்டாகும். இது, உறவில் பிளவு ஏற்படுத்தும் செயலாகும். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications