Latest Updates
-
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
உங்க பொண்டாட்டி எப்பவும் சங்கடமாவே இருக்காங்களா? இதெல்லா நீங்க பண்ணுங்க எல்லா சரி ஆயிடும்!!
பெரும்பாலான திருமணமான ஆண்கள் இவ்வாறு புலம்புவார்கள்," அவ, எப்ப பாத்தாலும் ஒரு மாதிரியே இருக்கா, கேட்டா சங்கடம்'னு சொல்றா.. என்ன பிரச்சனைனே தெரியல.." என்று. ஏன் நீங்களே கூட இதை உங்கள் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ கூறி புலம்பியிருக்கலாம்.
ஒரே இடத்துல புருஷனும், பொண்டாட்டியும் வேலை பண்ணா இவ்வளோ பிரச்சனை வருமா என்ன?!!
ஆனால், என்றாவது அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? நேரடியாக போய் உங்கள் மனைவியிடம் கேட்டால், அவர்கள் ஒன்றுமில்லை என்று தான் கூறுவார்கள். ஆனால், அதன் பின்னன்னியில் சில பல காரணங்கள் ஒளிந்து இருக்கின்றன.
தங்களுக்கு மிகவும் பிடித்த ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 11 விஷயங்கள்!!!
ஆண்களுக்கு இதெல்லாம் ஒரு காரணமா என்று கொஞ்சம் மட்டமாக தெரிந்தாலும், பெண்கள் என்பவர்கள் வளர்ந்த குழந்தைகள் தான் என்பதை நாம் மறந்துவிட கூடாது, அவர்கள் அப்படி தான் இருப்பார்கள்....

பாராட்டு கிடைக்காத போது
மனைவி எப்போதும் பாராட்டுதலை எதிர்பார்ப்பார்கள், அது அவர்களை ஊக்குவிக்கும் என்பது தான் உண்மை. அவர்கள் நன்கு சுவையாக சமைத்த போது ஒரு வார்த்தை "நல்லா இருக்கு டீ.." என்று நீங்கள் சொல்வது மட்டுமே அவர்களுக்கு போதுமானது. அவர்கள் எதிர்பார்ப்பது இந்த சிறு அங்கீகாரம் தான். பெரும்பாலும் ஆண்களும், குழந்தைகளும் இதை செய்வதே இல்லை. இது அவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். போக போக சங்கடமாக உணர்வார்கள் பிறகு மன அழுத்தமாக அது மாறும்.

குழந்தைகள் புரிந்துக் கொள்ளாமல் இருப்பது
பெரும்பாலும் வீட்டு தலைவனாக இருந்தாலும், குழந்தைகளை கண்டிப்பாக, அதட்டி வளர்ப்பது தாய் தான். அப்பாக்கள் கொஞ்சி கொஞ்சி நண்பனாகிவிடுவார்கள். அதனாலேயே பிள்ளைகளுக்கு அம்மா என்றால் சில சமயம் வெறுப்பு வரும். இந்த செயல் மனைவிகளை சங்கடமாக உணர வைக்கும். இதற்கு அப்பாக்களும் கொஞ்சம் நல்லது, கெட்டது எடுத்துக் கூறி குழந்தைகளை வளர்ப்பது அவசியம்.

சமையல் சரியாக வரவில்லை என்றால்
பல வீடுகளில் இது நடக்கும், அவர்கள் ஈடுபாட்டுடன் சமைத்த உணவு சரியான சுவையில் வரவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருந்துவர். அதுவும், ஏதாவது பண்டிகை நாட்களில் இனிப்புகள் சமைத்து அது சரியாக வரவில்லை என்றால் அவ்வளவு தான்.

நலம் விசாரிப்பது
உங்கள் மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை நலம் விசாரிப்பது அவசியம். தினமும் குறைந்தது அலுவலகம் சென்று வந்தவுடன் "எப்படி இருக்க, இன்னிக்கி என்ன பண்ண..." என்று நீங்கள் அவர்களிடம் கேட்டாலே போதுமானது. அதையும் தாண்டி அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களை பற்றி விசாரிக்கும் ஆணாக நீங்கள் இருந்தால்.... தெய்வம் சார் நீங்க!!!! இதுவே போதும் உங்கள் மனைவிக்கு எந்த சங்கசமும் வராது. மிகவும் சந்தோசமாக இருப்பார்கள்.

தூக்கமின்மை
உங்கள் உடலில் இதயம் எப்படியோ, அப்படி தான் உங்கள் வீட்டில் மனைவி..., இவர்கள் இயங்குவது நின்றுவிட்டால் உங்கள் கதி அம்பேல்!! அவர்கள் ஓய்வெடுக்க மாட்டார்கள். நீங்கள் தான் அவர்களை ஓய்வெடுக்க கூற வேண்டும். மற்றும் சிறு சிறு உதவிகளை செய்ய வேண்டும். குறைந்தது செய்வது போல் நடிக்கவாவது வேண்டும். அதுவே அவர்கள் மிகப் பெரிதாக எண்ணி பெருமிதம் அடைவார்கள்.

உறுதுணையாக இருத்தல்
பெரும்பாலும் இது எதிர்மறையாக நடக்கும் கணவனுக்கு ஏதாவது கவலை அல்லது பிரச்சனை என்றால் மனைவி உறுதுணையாக இருப்பார்கள், இது இயல்பு. இதே விஷயம், உங்கள் மனைவி கவலையாக இருக்கும் போது, நீங்கள் அவள் அமைதியாய் இருக்கட்டும் எல்லாம் சரியாகிவிடும் என்று இருக்காமல், அவருக்கு ஆறுதல் சொல்லி, உறுதுணையாக இருக்க வேண்டும்.

அம்மா பிள்ளைகள்
சில ஆண்கள் திருமணத்திற்கு பின்னும் கூட அம்மா பிள்ளைகளாக இருப்பார்கள். இதில் தவறொன்றும் கிடையாது, ஆயினும் உங்கள் அம்மா பேச்சை மட்டும் கேட்டுக்கொண்டு மனைவி சொல்வதை காதில் வாங்காமல் இருந்தால் அவர்கள் சங்கடமாக தான் இருப்பார்கள்!!



Click it and Unblock the Notifications











