For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ என்னத்தான தேடுற?கண்ணிமைக்கும் நேரத்திலும் மறக்க முடியாத ஒரு முகம் my story #152

பள்ளிச் செல்லும் சிறுமி தன்னுடைய முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

|

பள்ளி கூடத்த விட்டு வந்ததுல இருந்து எதாவது வேல சொல்லிட்டேயிருப்பியாம்மா.... ஒரு குடம் தான நீ போய் எடுத்துட்டு வந்தா என்ன.... அம்புட்டு தூரம் நடந்து வந்து காலெல்லாம் வலிக்கிது இப்போ மறுபடியும் தண்ணி பிடிக்க போகச் சொல்ற....

நான் சிணுங்குவதைக் கூட கேட்காமல் வாசலில் குடத்தை வைத்திருந்தாள் அம்மா.

தினமும் பள்ளி சென்று விட்டு வந்ததிலிருந்து இது தான் எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சண்டை. அவளுக்கு எப்போதும் எதாவது வேலை செய்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்று வெளியிலிருந்து தண்ணீர் பிடித்து வருவது, இல்லையென்றால் மளிகை கடைக்கு போய் வருவது, அல்லது பாத்திரம் கழுவுவது ,வீடு கூட்டுவது உட்பட வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

love story of a school girl

love story of a school girl
Story first published: Monday, January 22, 2018, 17:19 [IST]
Desktop Bottom Promotion