Just In
- 12 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 42 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Movies தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இவை தான் நமது உண்மையான மகிழ்ச்சியா? மறந்ததும், இழந்ததும்!
நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்? இது உண்மையான மகிழ்ச்சி தானா? போன்ற கேள்விகளுக்கு நமது பதில் ஆம் என்று தான்இருக்கும். உலகை உள்ளங்கையில் வைத்து கட்டைவிரலால் ஸ்க்ரால் செய்துக் கொண்டிருக்கிறோமே... இது தான் உண்மையான மகிழ்ச்சியா? உலகை மெய் கண்ணில் காணாமல், மாயை சூழ்ந்த 5 இன்ச் தொடுதிரையை தீண்டி உறவாடிக் கொண்டிருப்பது தான் உண்மையான மகிழ்ச்சியா?
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தான், உறவுகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் நிதர்சனம். நம்மில் எத்தனைப் பேரால் இனிமேல் முகநூல் இன்றி வாழ்க்கையை நடத்த முடியும், ஸ்மார்ட் போன்களை துறந்துவிட்டு நமது வேலைகளை பார்க்க முடியும். கண் குறைபாட்டில் தொடங்கி ஆண்மை குறைபாடு வரை ஏற்பட காரணமாக இருக்கும் இவை தான் நம்மை சந்தோசப்படுத்துகின்றனவா...???
மது இல்லாத கேளிக்கை
இன்றைய தலைமுறையினர் சந்தோஷம், வெற்றி என்றால் முதலில் தேடும் விஷயம் மதுவாக தான் இருக்கிறது. அனைவரையும் இப்படி குற்றம் சாட்ட முடியாது. ஆனால், நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஒருசிலரால் அந்த வெற்றியின் களைப்பு மதுவில் தான் முடிகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
செல்போன்கள் இன்றி பேசுவது
முன்பெல்லாம் மரத்தடியிலும், டீ கடையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவது தான் நண்பர்கள் மத்தியில் பெரும் பொழுதுபோக்கு இடமாக இருந்தது. இன்று அனைவரும் ஒரே அறையில் இருந்தாலும் கூட, முகநூல், வாட்ஸ்-அப் என பிரிந்து தான் இருக்கிறார்கள் பெரும்பாலனா தருணங்களில்.
போதை இல்லாத கனவுகள்
பணம், உல்லாசம், செல்வம் என போதை நிறைந்த கனவுகள் தான் இன்று நிறைய இருக்கின்றன. கனவுகளை பின் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறலாம், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக கனவுவை பின் தொடரலாம். ஆனால், நல்ல வாழ்க்கை வேண்டும் என்பதற்காக நமது கனவை இழந்து யாரோ ஒருவர் வெற்றிபெற்ற கனவை நாமும் பின்தொடர்வது எந்த விதத்தில் நியாயம்?
செல்ஃபீ இல்லாத சிரிப்பு
யாரும் சிரிப்பதே இல்லை என்று குற்றம் கூறவில்லை. ஆனால், நாம் நினைவுகளாக சேமிக்கும் புகைப்படங்களில் அமைந்திருக்கும் செல்ஃபீ புன்னகைகள் 99% போலியானவை தான் என்பது யாராலும் மறுக்க முடியாது. வெறும் போட்டோ போஸ்காக தான் இதழில் புன்முறுவல் வருகிறது. இந்த கட்டாய செல்ஃபிக்கள் இல்லாது மகிழ்ந்து பேசிய அந்த தருணங்களே உண்மையான மகிழ்ச்சி.
நிபந்தனைகள் இல்லாத காதல்
நீ இப்படி தான் இருக்க வேண்டும், இவ்வாறு தான் நடந்துக் கொள்ள வேண்டும். அங்கு செல்லக் கூடாது, முகநூலில் முகப்பு படம் வைக்கக் கூடாது. அந்த லைக் போட்டவன் யார்? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு மத்தியில் காதல் உணர்வெனும் உயிரை இழந்து வெறும் பொம்மையாக தான் இருக்கிறது.