Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருப்பது ஆண்களா? பெண்களா? ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவ என்ன தெரியுமா?
உண்மையில் காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் சிங்கிளாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியானது என்று. சிங்கிளாக இருப்பவர்கள் எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாக வாழ்க்கையை வாழலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் முக்கிய பிரச்சினையாக இருப்பது சிங்கிளாக வாழ்வதுதான். ஆனால் உண்மையில் காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் சிங்கிளாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியானது என்று. சிங்கிளாக இருப்பவர்கள் எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாக வாழ்க்கையை வாழலாம். சிங்கிளாக இருப்பதிலும் அதிக மகிழ்ச்சியாக இருப்பது ஆண்கள்தான் என்ற பொதுவான கருத்து உள்ளது, ஆனால் இது தவறானதாகும்.

உண்மைதான், சிங்கிளாக இருக்கும் ஆண்களை விட சிங்கிளாக இருக்கும் பெண்களே மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள். லண்டனை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான மின்டெல் நடத்திய ஆய்வின்படி, ஆண்களை விட பெண்கள் சிங்கிளாக இருக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு கூறும் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

தனிமை மற்றும் இனிமை
பொதுவாக சிங்கிளாக இருப்பவர்கள் குறிப்பாக பெண்கள் தனிமை மற்றும் மனசோர்வில் இருப்பார்கள் என்று கருத்து நிலவுகிறது. ஆனால் மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, இந்த ஆய்வில் சில திடுக்கிடும் கண்டுபிடிப்புகள் இருந்தன - 61 சதவீத பெண்கள் தாங்கள் சிங்கிளாக இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர், அதேசமயம் 49 சதவீத ஆண்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொண்டனர்.

சிங்கிள் பெண்களுக்கு டேட்டிங் செல்வதில் ஆர்வம் இல்லை
நீங்கள் இன்னும் உறுதியாக நம்பவில்லை என்றால், இங்கே அதிகமான புள்ளிவிவரங்கள் உள்ளன. ஆண் பங்கேற்பாளர்களில் 65 சதவீதம் பேர் மட்டுமே இன்றுவரை யாரையும் தேடவில்லை என்று கூறியிருந்தாலும், அதையே கூறிய பெண் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆண்களை விட 10 சதவீதம் அதிகமாக உள்ளனர். சுமார் 75 சதவீத பெண்கள் சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்கள் டேட்டிங் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அவர்களுடனான உறவு
பெண்கள் தங்களையே தனக்கு சிறந்த கம்பெனியாக நினைக்கிறார்கள். நான்கில் மூன்று பெண்கள் தங்களின் சிங்கிள் அந்தஸ்தை இழப்பதையோ அல்லது காதலிப்பதையோ விரும்புவதில்லை. இது அவர்களின் வாழ்க்கையை சிக்கலாக்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள். சிங்கிளாக இருக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

இளையவர்கள் தனிமையாக உணர்கிறார்கள்
மற்றொரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவெனில், பங்கேற்பாளர்களில் வெறும் 38 சதவீதம் பேர் சிங்கிளாக இருப்பதைப் பற்றி கவலைப்படுகையில், 18-24 வயதுக்குட்பட்டபங்கேற்பாளர்களில் 54 சதவீதம் பேர் இதைப் பற்றி அஞ்சினர். அந்த வயதைக் கடந்தவர்கள் சிங்கிளாக இருப்பதை நினைத்து கவலைப்படுவதில்லை.

காரணம் என்ன?
இந்த புள்ளிவிவரங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. நாம் வளரும்போது, நம்மை நன்கு புரிந்துகொள்வதோடு, அதிக நம்பிக்கையுடனும் இருக்கிறோம். தன்னைப் பற்றிய புரிதல் வந்த பிறகு வயதுக்குட்பட்ட சமூக விதிமுறைகளால் மக்கள் கவலைப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, மேலும் தங்கள் சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.

சிங்கிளாக இருப்பதன் பிரச்சினை
சிங்கிளாக இருப்பவர்கள் அவர்களின் நிதி குறித்து கவலைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு முடிவு செய்தது, ஆனால் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதையும் ஆய்வு கண்டறிந்தது. கூடுதலாக, தவறான உறவில் சிக்கி இருப்பதை விட சிங்கிளாக இருப்பது எப்போதும் நல்லது.



Click it and Unblock the Notifications