Latest Updates
-
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்..
ஓர் ஆணின் தீண்டல் மூலமாக பெண் அறியும் விஷயங்கள் என்னென்ன?
முத்தம், அரவணைப்பு, சமாதான வார்த்தைகள் போல, தீண்டலும் அன்பின் ஒரு வெளிப்பாடு தான்.
பிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான தீண்டல், காதலிக்கும், காதலனுக்கும் இடையே உருவாகும் தீண்டல், கோபத்தில் மனைவியின் கன்னத்தை பதம் பார்த்த பின்னர் கணவன் அவளை அரவணைக்க முயலும் தீண்டல், தோழியும், தோழனும் அள்ளி நகையாடும் தீண்டல் என தீண்டலில் பல வகை இருக்கின்றன.
தீண்டல் இல்லாத உறவே இல்லை. ஆனால், அது தீய செயலுக்கானதாக இருக்க கூடாது. நமது சமூகத்தில் பெண் பருவமடைந்த பிறகு தீண்டல் ஒரு தீண்டாமை செயலாகிவிடும்.

கட்டிக்கொடுக்கும் வரைக்கும், வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு என பெற்றோரே கூறுவதை நாம் கேட்டிருப்போம்.
முத்தம், அரவணைப்பு, சமாதான வார்த்தைகள் போல, தீண்டலும் அன்பின் ஒரு வெளிப்பாடு தான். ஓர் ஆண்மகனின் தீண்டல் பெண்ணின் வாழ்வில் எத்தகைய பங்கு கொண்டிருக்கிறது....?

அழுகை!
மனரீதியாக, உடல் ரீதியாக காயப்பட்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில், விழியோரம் வழியும் நீரை துடைத்து, அவளது கன்னங்களை கரங்களால் ஏந்தும் போதிலான தீண்டல் அவளது கண்ணீரை மட்டுமல்ல, கவலை, காயத்தையும் சேர்த்து போக்கும் அருமருந்து. இத்தகைய தீண்டல் உண்மையான அன்புடன் பழகும் நபர்களிடம் இருந்து மட்டுமே கிடைக்கும்.

பாதுகாப்பு!
நட்பாகே இருந்தாலுமே கூட, பெண்கள் தங்கள் தோள் மீது ஆண்கள் கைபோட்டு பேச அனுமதிக்க மாட்டார்கள். இது, நம் ஊர்கள் எங்கிலும் காண முடியும். ஒரு ஆணை, ஒரு பெண் தன்னை தீண்ட அனுமதிக்கிறாள், அவனது தீண்டலை ஏற்றுக் கொள்கிறாள் என்றால், அவனை, அவனுடன் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறாள் என்பதன் பொருளாகும். அத்தகைய பாதுகாப்பு உணர்வை ஆண்கள் கேடுத்துவிடவும் கூடாது, அதை பயன்படுத்தி தவறாக அணுகுதலும் கூடாது.

இச்சை மட்டுமல்ல...
பலரும் தீண்டல் என்றாலே அது உடல் கூடுதலின் முதல் அடி என எண்ணுவது தவறு. குழந்தையின் கன்னம் தடவி மகிழ்தல் கலவுவதற்கு அல்லவே! தீண்டல் என்பது சோகம் போக்கும் கருவி, இன்பத்தை அதிகரிக்கும் அருவி. எனவே, தீண்டல் எனும் அன்பின் வெளிப்பாட்டை வெறும் இச்சையின் படிக்கட்டாக மட்டும் காணவேண்டாம்.

உரசிக் கொள்வதற்கல்ல...
இருதேகம் உரசி விறைப்பு அடைவது அல்ல தீண்டல், அது மோகம்! ஓர் பெண்ணின் தேகத்தை உரசி மகிழும் கீழ்தர ஆசை ஓர் ஆணின் குணாதிசயம், பாத்திரத்தை ஆணிவேர் வரை பாதிக்கும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். பெண் தேகத்தை வெறும் சதை பிண்டமாக கருதுவோர், அவள் குருதியிலிருந்து வெளிவந்து உயிர் பிண்டம் தான் நாம் அனைவரும் என்பதையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அம்மா, தங்கை, மனைவி, மகள்!
அம்மா, தங்கை, மனைவி, மகள் என ஆண், பெண் மத்தியிலான எல்லா உறவிலும் தீண்டல் அன்பின் வெளிப்பாடாக பயன்படுத்தும் ஆண், அதுவே உறவுமுறையற்ற மூன்றாம் நபராக ஒரு பெண் தன் வாழ்வில் கடந்து செல்கையில் மட்டும் அதே தீண்டலை ஒரு இச்சை கருவியாக உபயோகப்படுத்துகிறான்.
அந்த மூன்றாம் நபரான பெண்ணும், வேறு ஒருவரின் அம்மா, தங்கை, மனைவி, மகளாக இருக்கலாம். உங்களின் அம்மா, தங்கை, மனைவி, மகள் வேறொரு ஆணுக்கு மூன்றாம் நபராகவும் இருக்கலாம்.
சமூகத்தை திருத்தும் முன்னர், நாம் திருந்த வேண்டும் அல்லவா.
முத்தம், அரவணைப்பு போல தீண்டலும் ஒரு அன்பின் வெளிபாடு தான். அதை சரியாக உணருங்கள். உங்களை ஒரு பெண் தீண்ட அனுமதிக்கிறாள் என்றால் அது அவள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, மற்றும் உங்களிடம் அவள் உணரும் பாதுகாப்பின் வெளிப்பாடு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications