Latest Updates
-
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காதலில் வரும் சண்டைய தவிர்க்க அவசியமான ஒன்று என்ன தெரியுமா?
காதலிடம் பச்சாதபம் கொள்வது எவ்வளவு அவசியமானது என்பதற்கு சில காரணங்கள்.
உறவில் இருப்பவர்களுக்கு தன் இணை மீதான பச்சாதபம் மிகவும் அவசியம் ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு இது முக்கிய இடம் வகிக்கிறது. நம்மோ நம்முடைய குணங்களோ நம்முடைய எண்ணங்களோடு நம்முடைய விருப்பங்களோடு போட்டியிடுபவர்கள் மீது எப்போதுமே நமக்கு வெறுப்பு இருக்கும்.
இதே உறவில் வெறுப்பு ஏற்பட்டாலும் இணை மீது பச்சாதாபம் வைத்திருப்பது அவசியம். ஒருவர் மீது ஒருவர் கருணை காட்டிக் கொள்வதைக் கூட இப்படிச் சொல்லலாம்.

சண்டைகள் :
காரணங்களின்றி சண்டை வருவது ஆச்சரியமில்லை. ஆனால் அவற்றை சரி செய்வது என்பது அத்தியாவசியமானது. சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் எளிதாக எடுத்துக் கொள்வதற்கு அடித்தளமாய் இருப்பது இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் தான்.

கவனம் :
இணையை பச்சாதாபத்தோட அணுகினால் அவரை கவனத்துடன் கையாள முடியும். அவருக்கு தேவையான கவனத்தையும் அன்பையும் உங்களால் கொடுக்க முடியும்.
காதலில் உங்களுடைய இருப்பதைத் தான் உங்கள் இணை அதிகம் விரும்புவார்கள் என்பதால் காதலில் பச்சாதாபம் கொண்டிருப்பது அவசியம்.

பாசிட்டிவ் :
உங்கள் இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் இணைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அது பாசிட்டிவாகத்தான் இருக்கும். அவர்கள் செய்யும் தவறுகளை எளிதாக மன்னிக்க முடியும். தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று உங்கள் மூளை நம்பும். குழந்தை தவறு செய்யும் போது நாம் பெரிதாக தண்டிப்பதில்லை காரணம் குழந்தை தெரிந்தே இந்த தவறை செய்திருக்காது என்று நாம் நம்புகிறோம் அதே போல தான் இங்கேயும்.

கடந்து செல்வோம் :
எதையும் எளிதாக கடந்து வர வைத்திடும். இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் என்பது இருவருக்குள்ளும் சண்டை ஏற்படாத வண்ணம் உங்களை பாதுகாத்திடும்.

பொறுமை :
எந்த செயலுக்கும் முன்யோசனையின்றி சட்டென முடிவெடுப்பதில் தான் பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகிறது. கோபமாக அப்படி பேசிவிட்டேன் என்று பின்னால் மன்னிப்பு கேட்டு அலைவதுண்டு. ஆனால் இந்த பச்சாதாபம் அப்படியல்ல, கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்னால் உங்களை யோசிக்க வைக்கும். இதனால் பல பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

செயல் :
உறவுமுறையில் மிகவும் முக்கியமானது இது. இணையின் மீது பச்சாதாபம் கொள்வது உங்கள் காதலை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. இணை கோபமாக இருக்கிறார் என்றால் அதற்கான காரணம் என்ன? என்று நீங்கள் யூகிக்க முடியும். உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்கிற செல்ஃப் அனாலிசிஸ்க்கு உதவிடும்.



Click it and Unblock the Notifications
