Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
இணையத்தளம் உங்க உறவின் இணைப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?
சமூக தளங்கள் மற்றும் இணையதளத்தின் வருகைக்கு பிறகு உறவுகளில் காணப்படும் மாற்றங்கள்.
கடிதங்கள் எழுதும் போது இருந்த அதே உணர்வு இப்போது நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளில் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. இணையத்தளம் வந்த பிறகு நாம் நமது உறவுகளில் இழந்தது என்ன? பெற்றது என்ன? பெரும்பாலும் இழந்தவை தான் இருக்கின்றன...

1
கடிதம் எழுதும் போது, அந்த எழுத்துக்களில், வார்த்தைகளில் ஒரு உணர்வு இருக்கும். ஒவ்வொரு முறை அதே கடித்ததை திரும்ப, திரும்ப படிக்கும் போது அதே உணர்வை நாம் பெறுவோம். இந்த உணர்வு இன்றைய குறுஞ்செய்திகளில் இல்லை என்பது தான் நிதர்சனம்.

2
முன்னர் சண்டையிடும் போது பேசிய வார்த்தைகள் சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று சண்டையிடும் போது செய்யும் பதிவுகள், சண்டை சரியான பிறகும் கூட, அதை நினைவுப்படுத்தும் உறுத்தலாக தான் இருக்கின்றன.

3
நம் கண் முன்னே இருக்கும் உறவுகளை காட்டிலும், ஊர் பெயர் தெரியாத நபர்களுடன் பழகுவது, நட்பு வைத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.

4
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என நாம் ஒன்று நினைத்து அனுப்பும் செய்திகள், வேறு வித கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், தேவையில்லாத சண்டைகள் உருவாகும்.

5
தெரியாத ஒரு நபருடன் உறவில் இணைவது, அவருடன் பேசுவது, பழகுவது என்ற ஒரு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், எதிர்மறை தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

6
போலி கணக்குகள் மூலம், பணம், பொருட்கள் போன்றவற்றை கேட்டு வாங்கி ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது.

7
அன்னையர் தினம், காதலர் தினம் போன்றவற்றில் பதிவு செய்யப்படும் செல்ஃபீக்களில் மட்டும் தான் காதல் இருக்கிறதே தவிர, நேரில் காதல் இருப்பதில்லை.

8
இணையத்தளம், சமூக ஊடங்கங்கள் தூரத்தில் இருந்து காதலித்து வரும் நபர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கியிருக்கும் உறவுகளை இணைக்கும் பாலங்களாக இருக்கின்றன.

9
வீடியோ கால்கள், புகைப்பட பகிர்வுகள் போன்றவை நேரில் காண முடியாத உறவுகள் எப்படி இருக்கிறார்கள், என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications











