Just In
- 14 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 24 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 1 hr ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- Movies டோவினோ தாமஸுடன் லிப் லாக் காட்சியில் நடித்த பாவனா...முகம் சுளித்த ஃபேன்ஸ்!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இணையத்தளம் உங்க உறவின் இணைப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?
சமூக தளங்கள் மற்றும் இணையதளத்தின் வருகைக்கு பிறகு உறவுகளில் காணப்படும் மாற்றங்கள்.
கடிதங்கள் எழுதும் போது இருந்த அதே உணர்வு இப்போது நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளில் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. இணையத்தளம் வந்த பிறகு நாம் நமது உறவுகளில் இழந்தது என்ன? பெற்றது என்ன? பெரும்பாலும் இழந்தவை தான் இருக்கின்றன...
1
கடிதம் எழுதும் போது, அந்த எழுத்துக்களில், வார்த்தைகளில் ஒரு உணர்வு இருக்கும். ஒவ்வொரு முறை அதே கடித்ததை திரும்ப, திரும்ப படிக்கும் போது அதே உணர்வை நாம் பெறுவோம். இந்த உணர்வு இன்றைய குறுஞ்செய்திகளில் இல்லை என்பது தான் நிதர்சனம்.
2
முன்னர் சண்டையிடும் போது பேசிய வார்த்தைகள் சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று சண்டையிடும் போது செய்யும் பதிவுகள், சண்டை சரியான பிறகும் கூட, அதை நினைவுப்படுத்தும் உறுத்தலாக தான் இருக்கின்றன.
3
நம் கண் முன்னே இருக்கும் உறவுகளை காட்டிலும், ஊர் பெயர் தெரியாத நபர்களுடன் பழகுவது, நட்பு வைத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.
4
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என நாம் ஒன்று நினைத்து அனுப்பும் செய்திகள், வேறு வித கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், தேவையில்லாத சண்டைகள் உருவாகும்.
5
தெரியாத ஒரு நபருடன் உறவில் இணைவது, அவருடன் பேசுவது, பழகுவது என்ற ஒரு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், எதிர்மறை தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.
6
போலி கணக்குகள் மூலம், பணம், பொருட்கள் போன்றவற்றை கேட்டு வாங்கி ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது.
7
அன்னையர் தினம், காதலர் தினம் போன்றவற்றில் பதிவு செய்யப்படும் செல்ஃபீக்களில் மட்டும் தான் காதல் இருக்கிறதே தவிர, நேரில் காதல் இருப்பதில்லை.
8
இணையத்தளம், சமூக ஊடங்கங்கள் தூரத்தில் இருந்து காதலித்து வரும் நபர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கியிருக்கும் உறவுகளை இணைக்கும் பாலங்களாக இருக்கின்றன.
9
வீடியோ கால்கள், புகைப்பட பகிர்வுகள் போன்றவை நேரில் காண முடியாத உறவுகள் எப்படி இருக்கிறார்கள், என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கிறது.