Latest Updates
-
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா?
மனதிற்குப் பிடிக்காத மணவாழ்க்கையா? இனி எளிதில் விவாகரத்து பெறலாம்!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் விவாதத்தின் போது இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்பு திருமண சட்டம் 1954 ஆகியவற்றில், சட்ட கமிஷன் மற்றும் சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சட்டக் குழு மற்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலின பேதம்,கொடூரமாக நடந்து கொள்வது, வேறு மதத்துக்கு மாறுவது, சராசரி மனிதராக செயல்படாததது, குணப்படுத்த முடியாத தொழுநோய், பால்வினை நோய் போன்றவை விவாகரத்து பெற புதிய காரணங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.தம்பதியர் இருவரும் ஒருமித்து விவாகரத்து பெறும் இந்து திருமணச் சட்டப் பிரிவு 13-பி,சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 28 ஆகியவற்றிலும் சிறு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவாகரத்து கோரி தம்பதி இருவரும் ஒரு மனதாக மனு செய்யும் போது, அந்த மனு 6 மாதத்துக்குள் திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றம் விரைவில் விசாரித்து விவாகரத்து வழங்கும்.அதிகபட்சம் 18 மாதங்களுக்குள் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டு விடும்.
இருவருமே விவாகரத்து கோரும்போது அவர்கள் விரைவில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவும், கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
சொத்தில் பங்கு
விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவரின் சொத்தில் பாதி உரிமை உண்டு எனவும், இந்த சட்ட திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் பெற்ற குழந்தைகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் முதன் முறையாக இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











