Just In
- 10 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 39 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மனதிற்குப் பிடிக்காத மணவாழ்க்கையா? இனி எளிதில் விவாகரத்து பெறலாம்!
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் விவாதத்தின் போது இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்பு திருமண சட்டம் 1954 ஆகியவற்றில், சட்ட கமிஷன் மற்றும் சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சட்டக் குழு மற்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலின பேதம்,கொடூரமாக நடந்து கொள்வது, வேறு மதத்துக்கு மாறுவது, சராசரி மனிதராக செயல்படாததது, குணப்படுத்த முடியாத தொழுநோய், பால்வினை நோய் போன்றவை விவாகரத்து பெற புதிய காரணங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.தம்பதியர் இருவரும் ஒருமித்து விவாகரத்து பெறும் இந்து திருமணச் சட்டப் பிரிவு 13-பி,சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 28 ஆகியவற்றிலும் சிறு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவாகரத்து கோரி தம்பதி இருவரும் ஒரு மனதாக மனு செய்யும் போது, அந்த மனு 6 மாதத்துக்குள் திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றம் விரைவில் விசாரித்து விவாகரத்து வழங்கும்.அதிகபட்சம் 18 மாதங்களுக்குள் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டு விடும்.
இருவருமே விவாகரத்து கோரும்போது அவர்கள் விரைவில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவும், கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
சொத்தில் பங்கு
விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவரின் சொத்தில் பாதி உரிமை உண்டு எனவும், இந்த சட்ட திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் பெற்ற குழந்தைகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் முதன் முறையாக இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.