Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
இந்த கஞ்சியை காலையில் ஒரு கப் குடிச்சா போதும்.. கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வெளியேறி, எடை வேகமா குறையும்..
Weight Loss Thinai Kanji Recipe In Tamil: உடல் பருமனால் நிறைய பேர் தற்போது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் இருந்து வருகிறார்கள். அப்படி நீங்களும் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், காலையில் திணை கஞ்சியை செய்து குடியுங்கள்.
இந்த திணை கஞ்சியில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும், கெட்ட நீரையும் வெளியேற்றும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும். இந்த கஞ்சியை காலை, இரவு என எந்த வேளையிலும் குடிக்கலாம். ஆனால் இதை தினமும் காலையில் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் மூலம் எடை இழப்புக்கு உதவி புரியும்.

உங்களுக்கு இந்த திணை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திணை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* திணை - 50 கிராம் அல்லது 1 கப்
* கருப்பு சுண்டல் - 50 கிராம்
* நல்லெண்ணெய் - 1/2
* வெந்தயம் - 1/4
* சீரகம் - 1/4
* சின்ன வெங்காயம் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 6 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கருப்பு சுண்டலை 50 கிராம் எடுத்து நீரில் 6 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 50 கிராம் அளவுள்ள ஒரு கப் திணையை நீரில் 2-3 முறை
கழுவிவிட்டு, அதில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள திணையை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து,
அத்துடன் ஊற வைத்த சுண்டலையும் சேர்த்து 2-3 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் 6 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து,
குக்கரை மூடி உயர் தீயில் 2 விசிலும், குறைவான தீயில் 2 விசிலும்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அனைத்தையும் நன்கு மென்மையாகும்
வரை மசித்து விட வேண்டும்.
* பின் அதில் கஞ்சி பதத்திற்கு வேண்டிய சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை
மீண்டும் அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், மிளகுத் தூள் மற்றும் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லியை சிறிது தூவி நன்கு கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான திணை கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications