Just In
- 32 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அன்னையர் தினத்திற்காக ஸ்பெஷல் பாகற்காய் குழம்பு!!!
அனைவரும் அம்மாவிடம் இருந்து நிறைய ரெசிபிக்களை கற்றிருப்போம். அந்த வகையில் நான் எனது அம்மாவிடம், எனக்கு பிடித்த பாகற்காய் குழம்பை எப்படி அருமையான சுவையில் செய்வது என்று கற்றுக் கொண்டேன். என் அம்மா சொல்லிக் கொடுத்த, இந்த முறையில் பாகற்காயின் கசப்பே தெரியாது. அந்த அளவு என்னுடைய அம்மா எளிதான முறையில் பாகற்காய் குழம்பு செய்வதை சொல்லிக் கொடுத்தார்கள்.
இப்போது அந்த பாகற்காய் குழம்பின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதை நீங்களும் வீட்டில் செய்து, விரும்பி சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய்
-
1
1/2
கப்
(நறுக்கியது)
புளி
-
1
பெரிய
எலுமிச்சை
அளவு
(1
கப்
நீரில்
ஊற
வைத்தது)
வெல்லம்
-
1
1/2
டேபிள்
ஸ்பூன்
உப்பு
-
1
டீஸ்பூன்
தண்ணீர்
-
1
கப்
மசாலாவிற்கு...
தேங்காய்
-
2
டேபிள்
ஸ்பூன்
(துருவியது)
வர
மிளகாய்
-
5
உளுத்தம்
பருப்பு
-
1
டேபிள்
ஸ்பூன்
கசகசா
-
1
டீஸ்பூன்
தண்ணீர்
-
1/4
கப்
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
3
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1/2
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
செய்முறை:
முதலில் நறுக்கிய பாகற்காயை, மஞ்சள் கலந்து நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கசகசாவையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின்னர் வறுத்த பொருட்களை குளிர வைத்து, அதனை தேங்காயுடன் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள பாகற்காயை, அத்துடன் சேர்த்து 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் புளியைக் கரைத்து பாகற்காய் கலவையில் ஊற்றி, தீயை குறைவிலேயே வைத்து 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
பாகற்காயானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான பாகற்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Recipe Courtesy: Mrs. Gayathri