Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
அன்னையர் தினத்திற்காக ஸ்பெஷல் பாகற்காய் குழம்பு!!!
அனைவரும் அம்மாவிடம் இருந்து நிறைய ரெசிபிக்களை கற்றிருப்போம். அந்த வகையில் நான் எனது அம்மாவிடம், எனக்கு பிடித்த பாகற்காய் குழம்பை எப்படி அருமையான சுவையில் செய்வது என்று கற்றுக் கொண்டேன். என் அம்மா சொல்லிக் கொடுத்த, இந்த முறையில் பாகற்காயின் கசப்பே தெரியாது. அந்த அளவு என்னுடைய அம்மா எளிதான முறையில் பாகற்காய் குழம்பு செய்வதை சொல்லிக் கொடுத்தார்கள்.
இப்போது அந்த பாகற்காய் குழம்பின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதை நீங்களும் வீட்டில் செய்து, விரும்பி சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1 1/2 கப் (நறுக்கியது)
புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்தது)
வெல்லம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு...
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வர மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் நறுக்கிய பாகற்காயை, மஞ்சள் கலந்து நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கசகசாவையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின்னர் வறுத்த பொருட்களை குளிர வைத்து, அதனை தேங்காயுடன் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள பாகற்காயை, அத்துடன் சேர்த்து 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் புளியைக் கரைத்து பாகற்காய் கலவையில் ஊற்றி, தீயை குறைவிலேயே வைத்து 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
பாகற்காயானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான பாகற்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Recipe Courtesy: Mrs. Gayathri



Click it and Unblock the Notifications