Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
புதினா மல்லி சப்பாத்தி
காலையில் எழுந்ததும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள புதினா மல்லி சப்பாத்தியை செய்து கொடுங்கள். இந்த ரெசிபியை மதிய வேளையில் கூட சாப்பிடலாம்.
குறிப்பாக எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த புதினா மல்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகப் பொடி, பெருங்காயத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
பின்பு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் ஒரு உருண்டையை எடுத்து தேய்த்து, அதன் நடுவே வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, நான்கு புறமும் மடக்கி, மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான புதினா மல்லி சப்பாத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications