Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
புதினா மல்லி சப்பாத்தி
காலையில் எழுந்ததும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள புதினா மல்லி சப்பாத்தியை செய்து கொடுங்கள். இந்த ரெசிபியை மதிய வேளையில் கூட சாப்பிடலாம்.
குறிப்பாக எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த புதினா மல்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகப் பொடி, பெருங்காயத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
பின்பு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் ஒரு உருண்டையை எடுத்து தேய்த்து, அதன் நடுவே வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, நான்கு புறமும் மடக்கி, மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான புதினா மல்லி சப்பாத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications