Latest Updates
-
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கேரட் சீஸ் சப்பாத்தி
விடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் அப்படி காலையில் சமைக்கும் போது சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கு அப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிட தோன்றினால், கேரட் சீஸ் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்.
இது ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். வேண்டுமானால் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கேரட் சீஸ் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 2 (துருவியது)
சீஸ் - 1/4 கப் (துருவியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து 3-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் ஒரு பௌலில் அந்த கேரட்டை சேர்த்து, அத்துடன் துருவிய சீஸ், சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போன்று லேசாக தேய்த்து, அதன் நடுவே சிறிது கேரட் கலவையை வைத்து, மடித்து, மீண்டும் சப்பாத்தி போன்று கலவை வெளியே வராதவாறு தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்க்க வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய்/நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், கேரட் சீஸ் சப்பாத்தி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications