Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
கேரட் சீஸ் சப்பாத்தி
விடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் அப்படி காலையில் சமைக்கும் போது சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கு அப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிட தோன்றினால், கேரட் சீஸ் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்.
இது ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். வேண்டுமானால் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கேரட் சீஸ் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 2 (துருவியது)
சீஸ் - 1/4 கப் (துருவியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து 3-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் ஒரு பௌலில் அந்த கேரட்டை சேர்த்து, அத்துடன் துருவிய சீஸ், சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போன்று லேசாக தேய்த்து, அதன் நடுவே சிறிது கேரட் கலவையை வைத்து, மடித்து, மீண்டும் சப்பாத்தி போன்று கலவை வெளியே வராதவாறு தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்க்க வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய்/நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், கேரட் சீஸ் சப்பாத்தி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications