Latest Updates
-
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது!
கேரட் சீஸ் சப்பாத்தி
விடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் அப்படி காலையில் சமைக்கும் போது சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கு அப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிட தோன்றினால், கேரட் சீஸ் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்.
இது ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். வேண்டுமானால் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கேரட் சீஸ் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 2 (துருவியது)
சீஸ் - 1/4 கப் (துருவியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து 3-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் ஒரு பௌலில் அந்த கேரட்டை சேர்த்து, அத்துடன் துருவிய சீஸ், சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போன்று லேசாக தேய்த்து, அதன் நடுவே சிறிது கேரட் கலவையை வைத்து, மடித்து, மீண்டும் சப்பாத்தி போன்று கலவை வெளியே வராதவாறு தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்க்க வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய்/நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், கேரட் சீஸ் சப்பாத்தி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications