Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்..
Summer Special Vazhaithandu Mor Kootu Recipe In Tamil: கோடைக்காலம் வந்துவிட்டாலே ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் ஒவ்வொரு நாள் சமையலையும் முடிவு செய்வது என்பது பெரிய வேலையாக இருக்கும். இதுவும் மதிய வேளையில் தான் முடிவெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் காரமாக சாப்பிட பிடிக்காது. சொல்லப்போனால் அடிக்கிற வெயிலுக்கு சாப்பிடவே தோன்றாது. அப்படியே சாப்பிட தோன்றினாலும் காரசாரமாக இல்லாமல் சாப்பிட நினைப்போம்.

அதுவும் வீட்டில் தயிர் இருந்தால், அதுவே போதும் என்று நினைப்போம். ஆனால் எத்தனை நாள் வெறும் தயிரை சாப்பிட முடியும். இந்நிலையில் கோடையில் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அதுவும் வாழைத்தண்டை வெறுமனே பொரியல் மட்டும் செய்து சாப்பிடாமல், அத்துடன் மோர் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். அதோடு இது உடல் சூட்டையும் குறைக்கும்.
இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபி குறித்து கவிதா சமையலறை என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் மசாலா அரைப்பதற்கு..
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* சின்ன வெங்காயம் - 4-5 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* வாழைத்தண்டு - 250 கிராம் (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த தேங்காய் மசாலா
* மோர் - 1 கப்
செய்முறை:
* முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, நீரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம்
ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் 4 வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள
வாழைத்தண்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து
2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி இறக்கி 5 நிமிடம் குளிர
வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கப் மோரை சேர்த்து கிளறினால், சுவையான வாழைத்தண்டு
மோர் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications