Latest Updates
-
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்..
Summer Special Vazhaithandu Mor Kootu Recipe In Tamil: கோடைக்காலம் வந்துவிட்டாலே ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் ஒவ்வொரு நாள் சமையலையும் முடிவு செய்வது என்பது பெரிய வேலையாக இருக்கும். இதுவும் மதிய வேளையில் தான் முடிவெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் காரமாக சாப்பிட பிடிக்காது. சொல்லப்போனால் அடிக்கிற வெயிலுக்கு சாப்பிடவே தோன்றாது. அப்படியே சாப்பிட தோன்றினாலும் காரசாரமாக இல்லாமல் சாப்பிட நினைப்போம்.

அதுவும் வீட்டில் தயிர் இருந்தால், அதுவே போதும் என்று நினைப்போம். ஆனால் எத்தனை நாள் வெறும் தயிரை சாப்பிட முடியும். இந்நிலையில் கோடையில் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அதுவும் வாழைத்தண்டை வெறுமனே பொரியல் மட்டும் செய்து சாப்பிடாமல், அத்துடன் மோர் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். அதோடு இது உடல் சூட்டையும் குறைக்கும்.
இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபி குறித்து கவிதா சமையலறை என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் மசாலா அரைப்பதற்கு..
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* சின்ன வெங்காயம் - 4-5 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* வாழைத்தண்டு - 250 கிராம் (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த தேங்காய் மசாலா
* மோர் - 1 கப்
செய்முறை:
* முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, நீரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம்
ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் 4 வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள
வாழைத்தண்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து
2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி இறக்கி 5 நிமிடம் குளிர
வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கப் மோரை சேர்த்து கிளறினால், சுவையான வாழைத்தண்டு
மோர் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications