Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ரிப்பன் பக்கோடா
மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் வீட்டிலேயே ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால் ரிப்பன் பக்கோடா செய்யலாம். இது மிகவும் ஈஸியான ஸ்நாக்ஸ் ரெசிபி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இங்கு அந்த ரிப்பன் பக்கோடாவின் எளிமையான செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை இன்று செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 3/4 கப்
மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு - 1/4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 4 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு, நெய் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதே சமயம் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து பிழிவதற்கு ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், முறுக்கு அச்சில் உள்ள மாவை நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.
பின் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் பிழிந்து பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications



