Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
ரிப்பன் பக்கோடா
மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் வீட்டிலேயே ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால் ரிப்பன் பக்கோடா செய்யலாம். இது மிகவும் ஈஸியான ஸ்நாக்ஸ் ரெசிபி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இங்கு அந்த ரிப்பன் பக்கோடாவின் எளிமையான செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை இன்று செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 3/4 கப்
மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு - 1/4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 4 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு, நெய் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதே சமயம் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து பிழிவதற்கு ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், முறுக்கு அச்சில் உள்ள மாவை நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.
பின் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் பிழிந்து பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications















