மழை நேரத்துல 1 கப் சேமியா இருந்தா.. காபி, டீ குடிக்கும் போது இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..

Posted By:

Semiya Pakoda Recipe In Tamil: தற்போது அடிக்கடி மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. அதுவும் மாலை வேளையில் மழை பெய்யும் வேளையில் காபி, டீ குடித்துக் கொண்டே மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட்டால், அவ்வளவு இதமாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில் பலரும் பஜ்ஜி, போண்டா, வடை என்று தான் செய்து சாப்பிடுவோம்.

அதுவும் வழக்கமாக செய்வது போன்று ஒரே மாதிரியாகத் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தால், வீட்டில் 1 கப் சேமியா இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த பக்கோடா நன்கு மொறுமொறுவென்று ருசியாக இருக்கும். முக்கியமாக 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.

Semiya Pakoda How To Make a Semiya Pakoda Recipe

உங்களுக்கு சேமியா பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சேமியா - 1 கப்
* சின்ன வெங்காயம் - 10-15
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 5-8 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 1 12 கப்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சேமியாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடி உரலில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே உரலில் பச்சை மிளகாயை சேர்த்து இடித்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு இடித்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து, அத்துடன் சீரகம், சோம்பு, பெருங்காயத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் கடலை மாவை சேர்த்து கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் நல்ல சூடான எண்ணெயை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள சேமியாவை சேர்த்து, சிறிது நீரை தெளித்து, பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சேமியா பக்கோடா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 21, 2025, 18:58 [IST]
Desktop Bottom Promotion