அட்டகாசமான சேலம் ஸ்டைல் கதம்ப சட்னி ரெசிபி

Posted By:

Salem Style Kadamaba Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை சுட திட்டம் போட்டுருக்கீங்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்ப இந்த சேலம் ஸ்டைல் கதம்ப சட்னியை செய்து பாருங்கள்.

உங்கள் வீட்டில் வெங்காயம், தக்காளி, புதினா மற்றும் இஞ்சி போன்ற எளிய பொருட்கள் உள்ளதா? அப்படியானால் இவற்றை வைத்தே அட்டகாசமான கதம்ப சட்னியை செய்யலாம். இந்த சட்னி புதிதாக ஏதாவது சாப்பிட விரும்புபவர்களுக்கு இந்த சட்னி மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதான மற்றும் தனித்துவமான சட்னி என்றால் அது இதுதான்.

Salem Kadamaba Chutney Recipe How to Make Salem Style Kadamaba Chutney

உங்களுக்கு சேலம் ஸ்டைல் கதம்ப சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலம் கதம்ப சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளிகள்
- ¼ கப் புதினா இலைகள்
- ¼ கப் கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 5 பூண்டு பல்
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- ¼ கப் துருவிய தேங்காய்
- 4 வர மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- சிறிதளவு புளி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- தண்ணீர் சிறிதளவு

செய்முறை:

- ஒரு கடாயில் ஒரு பாத்திரத்தில் ½ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- உளுத்தம்பருப்பு பொன்னிறமாக மாறியதும், பெருங்காயத்தைச் சேர்த்து, இந்த தாளிப்பை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

- அதே கடாயில் ½ டீஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, அது காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டுப் பல் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- தக்காளி குழைந்து போகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். இலைகள் சுருங்கியதும் அடுப்பை அணைத்து கலவையை ஆற விடவும்.

- ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் மற்றும் தாளித்த பொருட்களை சேர்க்கவும்.

- இதை கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

- பின்னர் வெங்காயம்-தக்காளி கலவை, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிறிதளவு புளி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- சட்னி கரடுமுரடாக அரைபடும் வரை சில நிமிடங்கள் அரைக்கவும்.

- தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை சேர்த்து அரைக்கவும்.

- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் அதை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான கதம்ப சட்னி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Thursday, April 2, 2026, 20:27 [IST]
Desktop Bottom Promotion