தினமும் காலையில் இத 1 கப் சாப்பிடுங்க.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமா கரைஞ்சி குச்சியாயிடுவீங்க...

Posted By:

Ragi Kara Puttu Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அதுவும் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? சற்று உடலுக்கு வலுசேர்க்கும் மற்றும் உடல் கொழுப்பைக் கரைக்கும் காலை உணவுகளை சாப்பிட வேண்டுமா? அப்படியானால் அடிக்கடி ராகியை சேர்க்கலாம். ராகியைக் கொண்டு நாம் பல ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் ராகி மாவைக் கொண்டு கார புட்டு அல்லது இனிப்பு புட்டு செய்யும் போது, சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும்.

ராகியில் கால்சியம் அதிகம் இருப்பதால், இது எலும்புகளுக்கு வலுவூட்டும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடையைக் குறைக்க நினைப்போர் ராகியை தினசரி உணவில் சேர்த்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறைய உதவி புரியும். முக்கியமாக இந்த ராகி புட்டுவை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம். இதனால் உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும்.

Ragi Kara Puttu How To Make a Ragi Kara Puttu Recipe

உங்களுக்கு கார ராகி புட்டு மற்றும் இனிப்பு ராகி புட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார ராகி புட்டு மற்றும் இனிப்பு ராகி புட்டுவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்

கார ராகி புட்டுவிற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* உப்பு - சிறிது

இனிப்பு ராகி புட்டுவிற்கு...

* தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
* நெய் - 1 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
* வேர்க்கடலை - 1 கைப்பிடி

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி புட்டு மாவு பதத்திற்கு திரித்திரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை 1/4 கப் சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* அடுத்து இட்லி தட்டை எடுத்து, அதன் மேல் எண்ணெய் தடவி, இந்த புட்டு மாவை வைக்க வேண்டும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை உள்ளே வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பிறகு அதை இரண்டு பாத்திரத்தில் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் கார ராகி புட்டு செய்யப் போகிறீர்கள் என்றால், இதில் ஒரு ராகி புட்டுவை எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் 1 டீஸ்பூன் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேர்க்கடலையை ஒரு கைப்பிடியை சேர்த்து 1 நிமிடம் வறுக்க வேண்டும்.
* அதன் பின் செய்து வைத்துள்ள ஒரு பாதி ராகி புட்டுவை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான கார ராகி புட்டு தயார்.
* அதுவே நீங்கள் இனிப்பு ராகி புட்டு செய்ய வேண்டுமானால், மற்றொரு பாதி ராகி புட்டுவை எடுத்து, அத்துடன் துருவிய தேங்காய், நாட்டுச்சர்க்கரை, வேர்க்கடலை மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால், இனிப்பு ராகி புட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, March 28, 2025, 7:04 [IST]
Desktop Bottom Promotion