Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
ஒரு கப் ராகி மாவும், 1 கேரட்டும் இருந்தா. . காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. அருமையா இருக்கும்..
Ragi Carrot Adai Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்வீங்களா? இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் ராகி மாவும், கேரட்டும் இருந்தா, அதைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள். இந்த ராகி கேரட் அடை ருசியாக இருப்பதோடு, சத்தானதும் கூட. மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இதற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை.
உங்களுக்கு ராகி கேரட் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கேரட் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவை சேர்த்து
லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து கேரட்டின் நிறம் மாறும்
வரை வதக்கி,கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு வதக்கியதை ராகி மாவுடன் சேர்த்து நன்கு கிளறி, கொஞ்சம்
கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உருட்டி ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாழை இலை அல்லது பால் கவரை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, உருட்டி வைத்துள்ள ஒரு உருண்டையை எடுத்து மெலிசாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அதில்
தட்டி வைத்துள்ள அடையை சேர்த்து எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான ராகி கேரட் அடை தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications






