Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
இட்லி, தோசைக்கு வெறும் 2 நிமிஷத்துல அடுப்பே இல்லாம சட்னி செய்யணுமா? இந்த புளி மிளகாய் சட்னியை செய்யுங்க..
Puli Milagai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு இன்னும் சட்னி செய்யவில்லையா? இன்னும் ஒரே யோசனையில் தான் உள்ளீர்களா? ஆனால் நேரமாகிவிட்டதா? அப்படியானால் வெறும் 3 பொருள் கொண்டு 2 நிமிடத்தில் அடுப்பே இல்லாமல் சட்னி செய்யலாம். அது தான் புளி மிளகாய் சட்னி.
இந்த சட்னி அக்காலத்தில் கிராமத்து பகுதியில் அதிகம் செய்து சாப்பிடுவார்களாம். இந்த சட்னியின் ஸ்பெஷலே பச்சையாக சாப்பிடுவது தானாம். அதுவும் இதில் சேர்க்கும் நல்லெண்ணெய் இந்த சட்னிக்கு கூடுதல் சுவையை தரும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சட்னியை செய்து கொடுக்க நினைத்தால், இந்த புளி மிளகாய் சட்னியை செய்யலாம்.

உங்களுக்கு புளி மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* சின்ன வெங்காயம் - 15
* தண்ணீர் - சிறிது
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 10 வரமிளகாயை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சட்னியின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வரமிளகாயை
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 சிறிய எலுமிச்சை அளவு புளி, 15 சின்ன வெங்காயத்தை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால்,
சுவையான புளி மிளகாய் சட்னி தயார்.
* உங்களுக்கு ஒருவேளை பச்சை வாசனை பிடிக்காவிட்டால், இந்த சட்னியை
தாளிக்கலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆனால் இந்த சட்னியை
தாளிக்காமல் சாப்பிட்டால் தான், சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











