Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சிம்பிளான முறையில் உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கை கொண்டு குருமா செய்து கொடுங்கள். இதுவரை நீங்கள் உருளைக்கிழங்கு குருமாவை வீட்டில் செய்திருக்கலாம்.
ஆனால் இந்த உருளைக்கிழங்கு குருமாவில் தேங்காய் அரைக்கும் போது, அத்துடன் ஒருசில மசாலா பொருட்களையும் சேர்த்து அரைப்பதால், இந்த குருமா சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். முக்கியமாக இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 4
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 6
* பட்டை - 1/2 இன்ச்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தக்காளி விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 1/4 கப்
* முந்திரி - 6-8 (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கி, உருளைக்கிழங்கின் தோலுரித்து, கத்தியால் துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், மல்லி, சோம்பு, பட்டை, மிளகு, ஊற வைத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய இஞ்சி மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 1/2 கப் அல்லது தேவையான அளவு நீரை ஊற்றி மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு குருமா தயார்.
Image Courtesy: mrishtanna



Click it and Unblock the Notifications











