இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா?

பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பானது பேரழிவவை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். நெருப்பு எப்படி அழிவை ஏற்படுத்தும் சக்தியாக கருதப்படுகிறதோ அதேசமயத்தில் அனைத்து மதங்களிலும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இறந்த உடல்கள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன.

Which Part of the Body Doesn t Burn During Cremation

மனித உடல் என்பது நடமாடும் அதிசயமாகும், இறந்த உடல்கள் நெருப்பில் முழுமையாக எரிக்கப்பட்டாலும் மனித உடலின் ஒரு பாகம் மட்டும் எப்போதும் அழியாது. உடல் தகனத்தின்போதும் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கும் உடலின் ஒரு பகுதி உள்ளது. உயர் வெப்பநிலையில் ஒட்டுமொத்த உடலும் சாம்பலாக மாறினாலும் ஒரு பாகம் மட்டும் பாதிக்கப்படாது. ஆச்சரியமளிக்கும் விதமாக இதைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது.

இஉடலின் அழியாத பாகம் எது?

எவ்வளவு வெப்பத்திலும் உடலின் அழியாத பாகம் மனிதர்களின் பற்கள்தான். கடும் வெப்பம் நிலவினாலும், மனிதப் பற்கள் முழுமையாக எரிந்துபோவதில்லை. அதற்குக் காரணம் கால்சியம் பாஸ்பேட் எனும் வேதிப்பொருளால் பற்கள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஏனெனில், இப்பொருள் எளிதில் சாம்பலாக மாறுவதில்லை.

நெருப்பில் பற்களின் உறுதித்தன்மை

உடல் எரிக்கப்படும் போது, ​​உடலின் மென்மையான திசுக்களே முதலில் எரிகின்றன. ஆனால், பற்கள் ஒரு தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. பற்களின் மென்மையான திசுக்கள் ஆரம்பத்தில் எரிந்துவிட்டாலும், மிகக் கடினமான திசுவான 'எனாமல்' மட்டும் அழியாமல் எஞ்சியிருக்கும். பற்களில் உள்ள கால்சியம் பாஸ்பேட் சத்து காரணமாகவே பற்கள் இத்தகைய குறிப்பிடத்தக்க உறுதித்தன்மையைக் கொண்டுள்ளன. குறைந்த வெப்பநிலையில் மற்ற எலும்புகளும் எரியாமல் இருக்கலாம் என்றாலும், பற்கள் அவற்றின் அதீத நீடித்து உழைக்கும் தன்மையால் தனித்து நிற்கின்றன.

எப்போது பற்கள் அழியக்கூடும்?

எலும்புகளை முழுமையாக எரிப்பதற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எலும்புகளை முழுமையாகச் சாம்பலாக்க 1292 டிகிரி ஃபாரன்ஹீட் கிட்டதட்ட 700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியமாகும். இவ்வளவு அதிக வெப்பநிலையிலும் கூட, கால்சியம் பாஸ்பேட் முழுமையாகச் சாம்பலாக மாறுவதில்லை. இதனால்தான் பற்களும் சில எலும்புத் துண்டுகளும் பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன. நகங்களும் தகனத்தின் போது எரியாமல் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும், இது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

எலும்புகள் எரிவதில் உள்ள வேறுபாடுகள்

ஆய்வுகளின் படி, உடல் எலும்புக்கூடு சீராக எரிவதில்லை. உடலில் கொழுப்பு அமைந்துள்ள விதம் மற்றும் வெப்ப மூலம் போன்றவை, வெவ்வேறு எலும்புகள் எரியும் விதத்தைப் பாதிக்கின்றன. உடலின் மையப்பகுதியில் அதிகளவு கொழுப்பு குவிந்திருப்பதால் அங்குள்ள எலும்புகள் தீவிரமாக எரிகின்றன; ஆனால், கைகள் மற்றும் கால்களில் உள்ள புறப்பகுதி எலும்புகள் ஒப்பிட்டளவில் குறைந்த தீவிரத்துடனேயே எரிகின்றன.

ஒவ்வொரு எலும்பும் எந்த வெப்பநிலையில் எரியும்?

தகனத்தின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். 670 முதல் 810 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில், உடல் 10 நிமிடங்களுக்குள் உருகத் தொடங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 20 நிமிடங்களில், மண்டை ஓட்டின் முன்புற எலும்பின் மீதுள்ள மென்மையான திசுக்கள் உருகத் தொடங்குகின்றன. இக்காலகட்டத்திற்குள், மண்டை ஓட்டு அறையின் மெல்லிய வெளிச்சுவரான 'டபுலா எக்ஸ்டர்னா'வில் ( விரிசல்கள் தோன்றுகின்றன. 30 நிமிடங்களுக்குள் தோல் முழுவதும் எரிந்து, அதற்குக் கீழே உள்ள உடல் பாகங்கள் எரியத் தொடங்குகின்றன. முழுமையான உடல் தகனமடைவதற்கு சுமார் 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகிறது.

Story first published: Thursday, July 9, 2026, 18:34 [IST]
Desktop Bottom Promotion