Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
செட்டிநாடு மட்டன் குழம்பு - ரம்ஜான் ஸ்பெஷல்!
ரம்ஜான் பண்டிகை நெருங்கிவிட்டது. அனைத்து இஸ்லாமியர்களின் வீடுகளிலும் ஆளை இழுக்கும் வண்ணம் அற்புதமான சமையல் வாசனை வீசும். அதிலும் மட்டனை தான் பலரும் சமைப்பார்கள். இந்த ரம்ஜான் பண்டிகைக்கு உங்கள் வீட்டில் எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், நம் செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள்.
இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு சமையலின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து ரம்ஜானை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
மசாலா பொருட்கள்...
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
செட்டிநாடு மசாலா பொடிக்கு...
வரமிளகாய் - 6-8
மல்லி - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 5 செ.மீ
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
அன்னாசிப்பூ - 1
தேங்காய் மசாலாவிற்கு...
தேங்காய் - 1 கப்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 'செட்டிநாடு மசாலா பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைவான தீயில் 15-20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, பின் இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 15-20 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications