Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
நெத்திலி மாங்காய் குழம்பு
மீன்களிலேயே நெத்திலி மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இந்த குழம்புடன் மாங்காய் சேர்த்துக் கொண்டால் இன்னும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு சுவையான மீன் குழம்பு செய்ய தெரியாதா? எப்போது மீன் குழம்பு செய்தாலும், அது புளிக்குழம்பு போல் உள்ளதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. மீன்களிலேயே நெத்திலி மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இந்த குழம்புடன் மாங்காய் சேர்த்துக் கொண்டால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு நெத்திலி மாங்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே நெத்திலி மாங்காய் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெத்திலி மீன் - 500 கிராம்
* துருவிய தேங்காய் - 2 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* பச்சை மிளகாய் - 5
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* புளி - ஒரு எலுமிச்சை அளவு
* பச்சை மாங்காய் - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் நெத்திலி மீனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மாங்காயை சேர்த்து வதக்கி, புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நெத்திலி மீன்களை சேர்த்து மென்மையாக கிளறி, மூடி வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான நெத்திலி மாங்காய் குழம்பு தயார்.
குறிப்பு:
* பச்சை மிளகாய்க்கு பதிலாக, வரமிளகாயை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
* பச்சை மாங்காய் இல்லாவிட்டால், சற்று புளியை அதிகமாக சேர்த்துக் கொண்டால் போதும்.
* இதில் நெத்திலி மீன் சேர்க்கப்பட்டுள்ளது. நெத்திலி மீன் இல்லாதவர்கள் வேறு எந்த மீனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











