இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. சட்னிக்காகவே இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Nellore Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? பொதுவாக இட்லி என்றால் அதற்கு சட்னி காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் ஒரே மாதிரியான கார சட்னியை செய்து போரடித்துவிட்டதா?

அப்படியானால் ஒருமுறை நெல்லூர் கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னி காரம், புளிப்பு இரண்டும் கலந்து இருப்பதால், சுவை இன்னும் அருமையாக இருக்கும். சொல்லப்போனால் இந்த சட்னியை செய்தால், இந்த சட்னிக்காகவே வீட்டில் உள்ளோர் அதிகமாக இட்லியை சாப்பிடுவார்கள். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Nellore Kara Chutney How To Make a Nellore Kara Chutney Recipe

உங்களுக்கு நெல்லூர் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லூர் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8-10
* பூண்டு - 15-20 பல்
* சின்ன வெங்காயம் - 10-12
* பெரிய வெங்காயம் - 1
* புளி - சிறிய துண்டு
* தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வரமிளகாயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள தக்காளி வெங்காயத்தை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான நெல்லூர் கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 7, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion