மதியம் சாதத்துக்கு ஒருமுறை இந்த மிளகாய் கிள்ளி சாம்பாரை செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..

Posted By:

Milagai Killi Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? ஆனால் நீங்கள் செய்யும் சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்காதா? மிகவும் சிம்பிளாக அதே சமயம் வித்தியாசமான சுவையைக் கொண்ட சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மிளகாய் கிள்ளி சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மிளகாய் கிள்ளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகாய் கிள்ளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Milagai Killi SAmbar How To Make a Milagai Killi Sambar Recipe

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 1 3/4 கப்
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 5
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 15-20 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய பருப்பை குக்கரில் போட்டு, அதில் 1 3/4 கப் நீரை ஊற்றி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சீரகம் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, பருப்பை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கிளறி, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, புளிச்சாற்றினை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மிளகாய் கிள்ளி சாம்பார் தயார்.

Image Courtesy: Gomathi's Kitchen

[ of 5 - Users]
Story first published: Monday, August 26, 2024, 13:37 [IST]
Desktop Bottom Promotion