Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Masoor Toor Dal Dosa With Peanut Chutney Recipe In Tamil: காலையில் தோசைக்கு மாவு இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் மசூர் துவரம் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் தோசை சுடலாம். அதுவும் இந்த தோசைக்கு வேர்க்கடலை சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். முக்கியமாக தேங்காய் சேர்க்காமல் செய்யக்கூடிய வேர்க்கடலை சட்னி என்பதால் சுவை பிரமாதமாக இருக்கும். அதோடு இந்த டிபன் காம்போ ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. குறிப்பாக புரோட்டீன் அதிக நிறைந்த டிபன் என்பதால், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

உங்களுக்கு இந்த துவரம் பருப்பு தோசையும், தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு தோசை மற்றும் தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு தோசைக்கு...
* மசூர் பருப்பு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* தக்காளி - 1
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சைமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் மசூர் பருப்பை எடுத்துக்
கொண்டு, நீரை ஊற்றி, 2 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 1/2 மணிநேரம் கழித்து, பருப்பை நீரில் நன்கு கழுவிவிட்டு, பின்
அரைத்த மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன், 1/2 கப் ரவை, நறுக்கிய 1
தக்காளி, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது
நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் 1/4
கப் நீரை ஊற்றி அலசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 2
மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின் அதில் 100 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் 4 பல்
பூண்டு, சிறிய துண்டு புளியை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,
ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
அரைத்து வைத்துள்ள தோசை மாவை நன்கு கலந்து, தோசையாக ஊற்றி, மிதமான
தீயில் வைத்து, தோசையின் மேலே எண்ணெய் ஊற்றி தடவி விட்டு,
மொறுமொறுவென்று வேக வைத்து மடித்து எடுத்தால், துவரம் பருப்பு தோசை
தயார்.
குறிப்பு:
* இந்த துவரம் பருப்பு தோசைக்கு மாவை அரைத்ததும் புளிக்க வைத்து
தான் தோசை ஊற்ற வேண்டும் என்றில்லை, அரைத்ததும் கூட தோசை
ஊற்றலாம்.
* வேர்க்கடலை சட்னிக்கு தேங்காய் சேர்க்காமல் செய்வதால், சட்னி
விரைவில் கெட்டுப் போகாது.



Click it and Unblock the Notifications