Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சளி, இருமலில் இருந்து விடுபட கற்பூரவள்ளி இலை வெச்சு இப்படி ரசம் செஞ்சு குடிங்க.. டக்குன்னு சரியாயிடும்....
Karpooravalli Rasam Recipe In Tamil: தற்போது பனி அதிகம் கொட்டுவதால், நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சளி, இருமலுக்கு நிறைய மருந்து மாத்திரைகளை எடுப்பது மட்டுமின்றி, சளியை வெளியேற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒருசில மூலிகைகளை எடுத்து வந்தால், சளி விரைவில் முறிந்துவிடும். அதுவும் சளியை முறிப்பதில் கற்பூரவள்ளி இலை மிகவும் சிறந்தது.
கை வைத்தியத்தில் இந்த கற்பூரவள்ளி இலையின் சாறு சளிக்காக பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு இதன் சாற்றினை குடிக்க பிடிக்காவிட்டால், அந்த கற்பூரவள்ளி இலையைக் கொண்டு ரசம் வைத்து சாப்பிட்டால், சளி விரைவில் சரியாகும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி இலை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி இலை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கற்பூரவள்ளி இலை - 10-15
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6- பல்
* தக்காளி - 6-7
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி,
கற்பூரவள்ளி இலை, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கற்பூரவள்ளி இலை விழுதை
சேர்த்து, 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ரசத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து, நுரைக்கட்டும் வரை
கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கற்பூரவள்ளி
இலை ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











