காளானை வெச்சு.. இந்த பக்குவத்துல குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பே தோத்துப்போயிடும்...

Posted By:

Mushroom Kuzhambu Recipe In Tamil: ஆடி பெருக்கு என்பதால் இன்று உங்கள் வீட்டில் அசைவ உணவுகள் ஏதுவும் செய்யமாடீர்களா? ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக் காளான் என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு பின்வரும் பக்குவத்தில் குழம்பு செய்யுங்கள்.

இப்படி குழம்பு செய்யும் போது, அது இட்லி தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். சொல்லப்போனால் இப்படி குழம்பு செய்தால், கறிக்குழம்பே தோத்துப் போயிடும். அந்த அளவில் இந்த காளான் குழம்பு மணமணக்க அருமையாக இருக்கும்.

Kalan Kuzhambu How To Make a Mushroom Kuzhambu Recipe

உங்களுக்கு காளான் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கக்கப்பட்ள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 2 சிட்டிகை
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* பட்டை - 1 துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

அரைப்பதற்கு...

* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
* முந்திரி - 6
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் மிச்ர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய், கொத்தமல்லி, முந்திரி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் உள்ள வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வாக்க வேண்டும்.
* பின் அதில் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி வைத்துள்ளதை
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காளான குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, August 3, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion