Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சைடு டிஷ் ஏதும் செய்யாம தோசை சாப்பிடணுமா? அப்ப கடப்பா கார தோசையை செய்யுங்க...
Kadappa Karam Dosa Recipe In Tamil: தினமும் காலையில் வெறும் தோசை செய்து, சட்னி, சாம்பார் தொட்டு சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக ஆந்திராவில் ராயல்சீமா பகுதியில் மிகவும் பிரபலமான கடப்பா காரம் தோசையை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
இந்த தோசைக்கு தனியாக ஒரு பொடியை அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கார சட்னியை தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்து தோசையை சுட்டு, மேலே சட்னியை பரப்பி, பொடியைத் தூவி எடுக்க வேண்டும். இந்த தோசைக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. ஒருவேளை செய்ய நினைத்தால், சாம்பார் செய்யலாம். இப்படி உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை தோசையை சுட்டுக் கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு கடப்பா காரம் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடப்பா காரம் தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - தேசையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
பொடிக்கு..
* பொட்டுக்கடலை - 1/3 கப்
* பூண்டு - 2 பல்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
சட்னிக்கு...
* வரமிளகாய் - 6
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 3 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாயை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு, உப்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள வரமிளகாய், வெங்காயம், சீரகம்,
பூண்டு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை மாவைக்
கொண்டு தோசை ஊற்றி, 1 நிமிடம் கழித்து, மேலே அரைத்து வைத்துள்ள
சட்னியை பரப்பி, அதன் மேல் பொட்டுக்கடலை பொடியைத் தூவி, எண்ணெய்
ஊற்றி, தோசையை திருப்பி போடாமல், அப்படியே மடித்து எடுத்தால், சுவையான
கடப்பா காரம் தோசை தயார்.
Image Courtesy: Cooking From Heart



Click it and Unblock the Notifications










