1/2 கப் எள்ளு இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. சத்தானதும் கூட..

Posted By:

Ellu Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட, அதே சமயம் சத்தான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் எள்ளு சட்னியை செய்யுங்கள். இந்த எள்ளு சட்னி, உடலுக்கு வலிமையைத் தரும், உடல் சோர்வை போக்கும், சளி, இருமலில் இருந்து விடுவிக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த சட்னியை கேட்பார்கள். முக்கியமாக இந்த சட்னியை துவையல் போன்று கெட்டியாக அரைத்து, சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Ellu Chutney How To Make a Tasty and Healthy Sesame Chutney Recipe

உங்களுக்கு எள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெள்ளை எள்ளு விதைகள் - 1/2 கப்
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* மிளகு - 1/4 ஸ்பூன்
* சீரகம் - 12 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* புளி - சிறிது
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து நன்கு மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து, 3 வரமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் எள்ளு விதைகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஜாரில் நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான எள்ளு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 8, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion