Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
1 கப் அவலும், தேங்காயும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிட்டு பாருங்க..
Aval Upma Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் காலையில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? மேலும் உங்கள் வீட்டிலும் தோசை மாவு தீர்ந்துவிட்டதா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலுடன் தேங்காயை சேர்த்து, தேங்காய் அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள்.
இந்த உப்புமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அதுவும் வேலைக்கு செல்வோர், பேச்சுலர்கள் போன்றோருக்கு ஏற்ற ரெசிபி. உப்புமா பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இந்த தேங்காய் அவல் உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி அவல் - 250 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4 (உடைத்தது)
* பச்சைமிளகாய் - 2 (உடைத்தது)
* வரமிளகாய் - 2 (உடைத்தது)
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கெட்டி அவலை நீரில் 2-3 முறை கழுவி, அதில் நீரை ஊற்றி,
10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அவலில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வறுத்த வேர்க்கடலை, உடைத்த முந்திரியை சேர்த்து 1
நிமிடம் வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாயை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஊற வைத்து வடிகட்டி வைத்துள்ள அவலை சேர்த்து, நன்கு கிளறி
விட வேண்டும். அவல் நன்கு சூடானதும், அதில் கொத்தமல்லியை சிறிது தூவி
கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் அவல் உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications











