Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
செட்டிநாடு தக்காளி புதினா சட்னி ரெசிபி... இந்த சூப்பரான சட்னிக்கு வெங்காயம், பூண்டு தேவையில்ல...!
Chettinad Tomato Pudina Chutney Recipe in Tamil: சுவையான உணவுகள் என்றாலே தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது செட்டிநாடு உணவுகள்தான். அந்த அளவிற்கு செட்டிநாடு உணவுகளின் சுவையும், தனித்துவமும் புகழ்வாய்ந்தவை.
இட்லி, தோசை என்று வரும்போது எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்யாமல் செட்டிநாடு ஸ்டைல் சட்னி அரைக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான செட்டிநாடு சட்னிதான் தக்காளி புதினா சட்னி.

இந்த தக்காளி புதினா சட்னிக்கு வெங்காயம், பூண்டு மற்றும் தேங்காய் போன்ற எதுவுமே தேவையில்லை. எளிதில் செய்யக்கூடிய இந்த சட்னி டிபன் வகைகளுக்கு மட்டுமின்றி சாதத்திற்கு கூட சூப்பராக இருக்கும். இந்த பதிவில் செட்டிநாடு தக்காளி புதினா சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- நறுக்கிய தக்காளி - 1 கப்
- புதினா இலைகள் - 1/4 கப்
- கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 5
- எண்ணெய் - வதக்க 1 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - தாளிக்க 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
- உடைத்த உளுந்து - 1/2 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போடவும். சீரகம் வெடித்ததும் அதில் வர மிளகாயை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
- இப்போது புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சிறிது வதக்கவும். பழுப்பு நிறமாக மாறாமல், அவை சுருங்கும் வரை வதக்கவும்.
- இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு வெந்தவுடன், முழுவதுமாக ஆறவிடவும். மிக்சியில் இந்த கலவையைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரவென்று அரைக்கவும்.
- பேஸ்ட் போல அரைக்கக் கூடாது, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக தெரிவது போல இருக்க வேண்டும்.
- சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதை தாளிக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும், அதன்பின் உளுந்து சேர்த்து அதை சட்னி மீது ஊற்றவும்.
- சூப்பரான செட்டிநாடு தக்காளி புதினா சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு இது சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications