Just In
- 1 hr ago
அடிக்கடி சீக்கிரம் சோர்வடைகிறீர்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- 17 hrs ago
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- 17 hrs ago
ரமலான் நோன்பு இருக்குறவங்க ஆரோக்கியமா இருக்க 'இந்த' விஷயங்கள கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- Sports
பறக்க பறக்க.. வேகமாக முடிவெடுத்த தோனி.. அந்த ரிவ்யூ கூட எடுக்கவில்லை.. ஏன் இவ்வளவு பதற்றம்? பின்னணி
- Movies
திடீர் மாரடைப்பு.. சுய நினைவை இழந்த விவேக்.. எக்மோ சிகிச்சை.. இறுதியில் மரணம்.. நடந்தது என்ன?
- News
சிஎஸ்கே உள்ளே.. சிக்கல் நிறைய இருக்கே.. இதையெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமா.. ஆண்டவா!
- Automobiles
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா
பால் பொருட்களுள் பன்னீர் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருளாகும். பன்னீரைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் செட்டிநாடு ரெசிபிக்களுள் பிரபலமான ஒன்றான பன்னீர் குருமாவும் ஒன்று. பொதுவாக செட்டிநாடு ரெசிபிக்கள் தனிச்சுவையுடன் இருப்பதற்கு காரணம், அதில் சேர்க்கப்படும் மசாலா தான். அந்த மசாலாவை பன்னீருடன் சேர்த்து சமைத்தால், அந்த குருமா இன்னும் ருசியாக இருக்கும். குறிப்பாக இந்த செட்டிநாடு பன்னீர் குருமா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
கீழே செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 250 கிராம்
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
செட்டிநாடு விழுது தயாரிப்பதற்கு...
* மல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* மிளகு - 2 டீஸ்பூன்
* கல்பாசி - 3
* அன்னாசிப்பூ - 2
* வரமிளகாய் - 6
* கசகசா - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் 'செட்டிநாடு விழுது' செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அந்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நீர் சேர்த்து மென்மையாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதித்ததும் மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா தயார்.
Image Courtesy: archanaskitchen