சன்டே ஸ்பெஷல்: மணமணக்கும்.. ருசியான... செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பு

Posted By:

Chettinad Pepper Chicken Kuzhambu Recipe: வார விடுமுறை என்பதால் அனைவரது வீட்டிலும் அசைவ உணவுகளை தயாரித்து பொறுமையாக ருசித்து வயிறு நிறைய சாப்பிடுவோம். அதுவும் ஆண்டின் இறுதி நாள் என்பதால், பலரும் வீட்டில் அதைக் கொண்டாட பல வித்தியாசமான அசைவ ரெசிபிக்களை சமைத்து சாப்பிட திட்டம் போட்டிருக்கலாம்.

நீங்களும் அப்படி ஒரு திட்டத்தைப் போட்டிருந்தால், அந்த மெனுவில் செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பெப்பர் சிக்கன் குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக சளி பிடித்திருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால், சளி கரைந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Chettinad Pepper Chicken Kuzhambu Recipe

உங்களுக்கு செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 1 கிலோ
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* சோம்பு - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* கிராம்பு - 4
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு..

* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் மல்லித் தூளை சேர்த்து நன்கு கிளறி, 1 கப் நீரை ஊற்றி குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு பெப்பர் சிக்கன் குழம்பு தயார்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Story first published: Sunday, December 31, 2023, 12:32 [IST]
Desktop Bottom Promotion