ஈவ்னிங் டைம்-ல பால், சர்க்கரை எதுவும் சேர்க்காம.. இந்த செட்டிநாடு ஸ்வீட்டை செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்..

Posted By:

Chettinad Pasi Paruppu Halwa Recipe: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? என்ன ஸ்வீட் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு செட்டிநாடு ஸ்வீட்டை செய்யலாம். அது தான் செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வா.

முக்கியமாக இந்த ஸ்வீட்டிற்கு பால், சர்க்கரை என்று எதுவும் தேவையில்லை. இதனால் இந்த ஸ்வீட் ஆரோக்கியமானதும் கூட. பாசிப்பருப்பு குளிர்ச்சி என்பதால், கோடையில் உடல் சூட்டைக் குறைக்க இந்த ஸ்வீட்டை செய்து சாப்பிடலாம்.

Chettinad Pasi Paruppu Halwa How To Make a Pasi paruppu Halwa Recipe

உங்களுக்கு செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* ரவை - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசிப்பருப்பை கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் ரவையை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வந்து ஓரளவு நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
* பின்பு மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து தொடர்ந்து கரண்டியால் கட்டிகளை மசித்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, அல்வா போன்று நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.
* வாணலியில் ஒட்டாத அளவில் சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து விட்டால், சுவையான செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வா தயார்.

Image Courtesy: kurinji. com

[ of 5 - Users]
Story first published: Friday, May 17, 2024, 17:17 [IST]
Desktop Bottom Promotion