கோதுமை மாவு இல்லாமலே சப்பாத்தி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்களேன்...

Posted By:

Chapati Without Flour Recipe: நீங்கள் சப்பாத்தி பிரியரா? தினமும் ஒருமுறையாவது சப்பாத்தியை சாப்பிட்டுவிட வேண்டுமா? ஆனால் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய கோதுமை மாவு தீர்ந்துவிட்டதா? கவலைப்படாதீர்கள். கோதுமை மாவு இல்லாமலேயே சப்பாத்தி செய்யலாம்.

அதுவும் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு இருந்தால், அருமையான சுவையில் சப்பாத்தியை செய்யலாம். இந்த சப்பாத்தி செய்வதற்கு அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் சுலபமாக வெறும் 4-5 பொருட்களைக் கொண்டே சப்பாத்தியை செய்யலாம்.

Chapati Without Flour How To Make a Chapati Without Flour

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு வைத்து சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு....

* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது

சப்பாத்திக்கு...

* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக்கி சேர்த்து, சிறிது உப்பு தூவி மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க வேண்டும்.
* கிழங்கு நன்கு குளிர்ந்ததும், அதன் நடுவே உள்ள நரம்பு பகுதியை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு அந்த கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும். இதனால் மாவு பிசைவதற்கு வசதியாக இருக்கும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் துருவிய கிழங்கை எடுத்து, அத்துடன் சிறிது உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* மாவானது மிகவும் இறுக்கமாக இருந்தால், சிறிது நீரை தெளித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தேய்க்கும் போது, அதன் முனைகள் வழக்கமான சப்பாத்தியைப் போன்று வராது. எனவே ஒரு தட்டு கொண்டு அழகாக சப்பாத்தி வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை ஒவ்வொன்றாக சேர்த்து, எண்ணெய் தடவி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான மரவள்ளிக்கிழங்கு சப்பாத்தி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 12, 2025, 22:44 [IST]
Desktop Bottom Promotion