Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா?
ஆந்திரா மிளகாய் சட்னி... இந்த சட்னிக்கு அடுப்பே தேவையில்ல.. ஐந்தே நிமிடத்தில் செஞ்சுடலாம்.. எப்படின்னு பாருங்க
Andhra Milagai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? காலையில் சற்று லேட்டாக எழுந்துவிட்டீர்களா? 5 நிமிடத்தில் சட்னி செய்யணுமா? அப்படியானால் ஆந்திரா மிளகாய் சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னிக்கு அடுப்பே தேவையில்லை. அதேப் போல் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்வீர்கள். பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த சட்னியை செய்து கொண்டு சென்றால், நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ஆந்திரா மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* பச்சை மிளகாய் - 6
* பூண்டு - 10 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 6 பச்சை மிளகாய் அல்லது காரத்திற்கு ஏற்ப
மிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை
சேர்க்க வேண்டும். ஒருவேளை சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், 2 பெரிய
வெங்காயத்தை துண்டுகளாக்கி சேர்க்கலாம்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் வெல்லத்தை
சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால், சுவையான ஆந்திரா
மிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











