Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
பெற்றோர்களே! மழைக்காலத்துல உங்க குழந்தைக்கு எந்த நோயும் வராமல் இருக்க... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
Monsoon Tips For Children: மழைக்காலம் வந்துவிட்டது! இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. ஆதலால், உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெற்றோர்களே! நீங்கள் சில மழைக்கால உதவிக்குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
கனமழையால் உங்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் தொண்டை புண் ஆகியவை ஏற்படலாம். இவை பொதுவான உடல்நலப் பிரச்சினைகள். பெரும்பாலான குழந்தைகள் பருவமழை காலத்தில் அதிக கலோரி, காரமான மற்றும் வாய் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளை உண்பதால் வயிற்றில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு ஆகியவை பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரால் பரவக்கூடிய பொதுவான நோய்கள். எனவே, பெற்றோர்களே, பருவமழை காலத்தில் உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக பராமரிப்பது நோய்தொற்று மற்றும் ஒவ்வாமைகளைத் தடுக்க உதவும்.
உணவு மற்றும் வாழ்க்கை முறை முதல் தடுப்பூசி வரை, பருவகால ஒவ்வாமை மற்றும் உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு வழிகள் உள்ளன. உங்கள் குழந்தையின் தினசரி வழக்கத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில அடிப்படை பருவகால உதவிக்குறிப்புகள் உள்ளன.
அவை என்னென்ன என்று தெரிந்து கொண்டு, மழைக்கால தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்தை பராமரிக்கவும்
ஆரோக்கியமான உணவுகள் சுவையானது அல்ல, என பெரும்பலான குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு பெற்றோராக, ஆரோக்கியமான உணவுகளை சுவையாக செய்துகொடுத்து, அந்த புரிதலை நீங்கள் மாற்றலாம். குழந்தைகள் சாப்பிட பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், அதிகப்படியான எண்ணெய் மற்றும் துரித உணவுகளை உட்கொள்வதிலிருந்து அவர்களை விலக்கி வைக்கவும். உங்கள் குழந்தையின் உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொடுங்கள்
இன்றைய நாளில் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு நாம் பழகி வருகிறோம். உங்கள் குழந்தை உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவதைத் தடுக்க வேண்டும். விளையாட மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய அவரை ஊக்குவிக்க வேண்டும்.
மழை இல்லாதபோது, உங்கள் குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். வீட்டினுள், திரையில் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, போதுமான ஆற்றல் செலவை வழங்கும் ஸ்கிப்பிங் மற்றும் நடைபயிற்சி போன்ற ஏரோபிக் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும்
சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கப் பழக்கம் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்கள் செல்போன், வீடியோ கேம் மற்றும் தொலைக்காட்சிகளில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள்.
உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குழந்தைகளுக்கு கேஜெட்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது அவர்கள் நன்றாக தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் உதவும்.
சுகாதாரத்தை பேணுங்கள்
நோய் தொற்று பரவாமல் இருக்க உங்கள் குழந்தையை சுகாதாரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, அவர்களின் கை சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். பருவமழை தொடர்பான நோய்களைத் தடுக்க, குழந்தைகள் தவறாமல் கைகளைக் கழுவுவதையும், தினமும் குளிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தை குறைக்கவும்
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கியுள்ளன. ஆதலால், மீண்டும் புதிதாக பள்ளிக்கு போவது, பாடங்களை கவனிப்பது பற்றி மாணவர்கள் சிறிது அழுத்தத்தை உணரலாம். அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்கள் மீது அதிக கல்வி அல்லது பாடநெறிக்கு அப்பாற்பட்ட அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். பெற்றோராக இல்லமால் நண்பர்களாக உங்கள் குழந்தைகளிடம் பழகுங்கள்.
தடுப்பூசிகள்
'வரும் முன் காப்பதே மேல்' என்ற பழமொழிக்கு ஏற்ப, உங்கள் பிள்ளையின் வயதுக்கு ஏற்ப தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் போட வேண்டும். இந்த தடுப்பூசிகள் டைபாய்டு மற்றும் ஹெபடைடிஸ் தடுப்பூசி, பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் டைபாய்டு மற்றும் ஹெபடைடிஸ் ஏ (மஞ்சள் காமாலை) ஆகியவற்றைத் தடுக்க உதவும்.
மழைக்கால உணவு
குழந்தைகளுக்காக மேலே குறிப்பிடப்பட்டுள்ள மழைக்கால குறிப்புகள் அனைத்தும் முக்கியமானவை என்றாலும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தைகளுக்கான சமச்சீர் உணவில் 20-25 சதவீதம் கொழுப்பு, 10-12 சதவீதம் புரதம் மற்றும் 60-70 சதவீதம் கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். மழைக்கால உணவின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்திக்கான பின்வரும் உணவுகளை உங்கள் குழந்தையின் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்களைத் தடுக்கின்றன. எந்த கூடுதல் சுவை, இனிப்பு அல்லது நிறங்கள் இல்லாமல் தயிர் சாப்பிட எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
கேரட், பீட்ரூட், தக்காளி, கீரை, பூசணி, சுண்டைக்காய் மற்றும் ப்ரோக்கோலி போன்ற கலவையான காய்கறிகளுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவை ஆரோக்கியமானவை மற்றும் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது இருமல், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளையும் குறைக்க உதவுகிறது.
சூப் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மஞ்சள் மற்றும் இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.
முட்டையில் புரதம், துத்தநாகம், வைட்டமின்கள் ஏ, பி, டி, ஈ, கே, இரும்பு, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. உங்கள் குழந்தைக்கு தினமும் ஒரு வேகவைத்த முட்டையை சாப்பிட கொடுங்கள்.
நோய்க்கிருமிகள் அதிகமாக வளர்வதற்கு ஈரமான சூழல் ஒரு காரணமாகும். எனவே, ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி. வைட்டமின்கள் பி, பி2, பி3 மற்றும் பி6, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முழுமையான ஊட்டச்சத்து தொகுப்பாகும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் எலுமிச்சையை உணவில் சேர்க்கலாம். தர்பூசணி, வாழைப்பழம், ஆப்பிள், பேரிக்காய், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பீட்ரூட் இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், பல நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது. எனவே, இந்த மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பீட்ரூட்டை உங்கள் குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
