Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் கவனிக்க வேண்டியவை!!
கர்ப்பம் தரித்தபின் அந்த 9 மாதங்கள் சாதரணமானதல்ல. பெண்களின் உயிரை உருக்கி இன்னொரு உயிர் வளரும் ஒவ்வொரு காலக்கட்டமும் மிக முக்கியமானது. அதுவும் அந்த சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு உடலில் பல பிரச்சனைகள் வரும். ஆனால் அவை எதையும் பிறக்கப் போகும் தங்களின் சிறு உயிருக்காக தாங்கிக் கொண்டிருப்பார்கள். அந்தசமயங்களில் கர்ப்ப கால பிரச்சனைகளிலிருந்து எப்படி விடுப்டலாம் என பார்க்கலாம்.

குமட்டல் வாந்தி :
முதல் மூன்று மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் அடிக்கடி வரும். சரியாக சாப்பிட முடியாது. சாப்பிட எதுவும் பிடிக்காது. இந்த மாதிரியான நேரங்களில் அம்மாக்களின் உடலில் ரத்தம் போதிய அளவு இருக்காது.
அதனால் மருத்துவர்கள் விட்டமின் பி-6 மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். மேலும் ரத்த சோகை ஏற்படலாம். கரு தன் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்க்ளை ரத்தம் மூலமாக அது உறிவதால் இரும்பு சத்து குறைவாக இருக்கும். எனவே இரும்பு சத்து மாத்திரைகளையும் அந்த நேரத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாந்தி வருகிறதே என சாப்பிடாமல் இருக்கக் கூடாது. ஏனெனில் கருவின் மிக முக்கிய வளர்ச்சி அந்த சமயத்தில்தான் நடக்கும். ஆகவே இடைவெளி விட்டு சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நெஞ்செரிச்சல் :
இரைப்பையை புறம் தள்ளி கரு வளரும்போது, சாப்பிடும் உணவு மற்றும் நொதிகள் உனவுக் குழாய்க்கு அடிக்கடி வரும். இதனால் அஜீரணம், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும். எனவே நீராகாரம் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மசாலா காரம் நிறைந்த உணவுகளை உன்ணக் கூடாது. அது போல நிறைய பழங்களை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் குறையும்.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் கர்ப்ப காலத்தில் சிலருக்கு ஏற்படும். இரும்பு சத்து நிறைந்த உணவுகளும், கர்ப்பப்பை கீழே உந்தப்படுவதால் உண்டாகும் பாதிப்பால் இவ்வாறு மலச்சிக்கல் உண்டாகும். ஆகவே நிறைய நீர்சத்து நிறைந்த பழங்கள், நார்சத்து நிறைந்த காய்களை உண்ணுவதே நல்லது.
முதுகு வலி :
அநேக பேர் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இதனை தவிர்க்க அவ்வப்போது இளஞ்சூட்டில் மசாஜ் செய்து கொள்ளலாம். சூடா நீரில் குளித்தால் பலனளிக்கும்.



Click it and Unblock the Notifications


