Just In
- 2 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 9 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 9 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் கவனிக்க வேண்டியவை!!
கர்ப்பம் தரித்தபின் அந்த 9 மாதங்கள் சாதரணமானதல்ல. பெண்களின் உயிரை உருக்கி இன்னொரு உயிர் வளரும் ஒவ்வொரு காலக்கட்டமும் மிக முக்கியமானது. அதுவும் அந்த சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு உடலில் பல பிரச்சனைகள் வரும். ஆனால் அவை எதையும் பிறக்கப் போகும் தங்களின் சிறு உயிருக்காக தாங்கிக் கொண்டிருப்பார்கள். அந்தசமயங்களில் கர்ப்ப கால பிரச்சனைகளிலிருந்து எப்படி விடுப்டலாம் என பார்க்கலாம்.
குமட்டல் வாந்தி :
முதல் மூன்று மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் அடிக்கடி வரும். சரியாக சாப்பிட முடியாது. சாப்பிட எதுவும் பிடிக்காது. இந்த மாதிரியான நேரங்களில் அம்மாக்களின் உடலில் ரத்தம் போதிய அளவு இருக்காது.
அதனால் மருத்துவர்கள் விட்டமின் பி-6 மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். மேலும் ரத்த சோகை ஏற்படலாம். கரு தன் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்க்ளை ரத்தம் மூலமாக அது உறிவதால் இரும்பு சத்து குறைவாக இருக்கும். எனவே இரும்பு சத்து மாத்திரைகளையும் அந்த நேரத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாந்தி வருகிறதே என சாப்பிடாமல் இருக்கக் கூடாது. ஏனெனில் கருவின் மிக முக்கிய வளர்ச்சி அந்த சமயத்தில்தான் நடக்கும். ஆகவே இடைவெளி விட்டு சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நெஞ்செரிச்சல் :
இரைப்பையை புறம் தள்ளி கரு வளரும்போது, சாப்பிடும் உணவு மற்றும் நொதிகள் உனவுக் குழாய்க்கு அடிக்கடி வரும். இதனால் அஜீரணம், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும். எனவே நீராகாரம் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மசாலா காரம் நிறைந்த உணவுகளை உன்ணக் கூடாது. அது போல நிறைய பழங்களை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் குறையும்.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் கர்ப்ப காலத்தில் சிலருக்கு ஏற்படும். இரும்பு சத்து நிறைந்த உணவுகளும், கர்ப்பப்பை கீழே உந்தப்படுவதால் உண்டாகும் பாதிப்பால் இவ்வாறு மலச்சிக்கல் உண்டாகும். ஆகவே நிறைய நீர்சத்து நிறைந்த பழங்கள், நார்சத்து நிறைந்த காய்களை உண்ணுவதே நல்லது.
முதுகு வலி :
அநேக பேர் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இதனை தவிர்க்க அவ்வப்போது இளஞ்சூட்டில் மசாஜ் செய்து கொள்ளலாம். சூடா நீரில் குளித்தால் பலனளிக்கும்.